Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லடாக் விவகாரம்.. இந்திய கோரிக்கையை ஏற்க மறுத்த சீனா.. 13-வது பேச்சுவார்த்தை தோல்வி.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு-காஷ்மீர் சர்வதேச எல்லை பகுதியில் அத்துமீறுவதை பாகிஸ்தான் ராணுவம் தனது வாடிக்கையாக வைத்துள்ளது. இந்த வரிசையில் இணைந்து கொண்ட சீனாவும் இந்திய எல்லையை அபகரிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது.

அருணாச்சல பிரதேச மாநில எல்லையை சீனா தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக் எல்லை பகுதிகளில் சீன ராணுவத்தினர் பெரும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.

லடாக் எல்லையில் மோதல்

லடாக் எல்லையில் மோதல்

கடந்த ஆண்டு ஜூன் 15-ம் தேதி லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய, சீன ராணுவ வீரர்களிடையே கடும் மோதல் மூண்டது. இரு நாட்டு ராணுவ வீரர்களும் கற்களால் தாக்கி கொண்டனர். இந்த பயங்கர மோதலில் நமது ராணுவ வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீன தரப்பில் 45 வீரர்களும் உயிரிழந்தனர்.

 பலகட்ட பேச்சுவார்த்தை

பலகட்ட பேச்சுவார்த்தை

இதனை தொடர்ந்து லடாக் எல்லையில் பெரும் பதற்றம் உண்டானது. இதன் பின்பு லடாக் எல்லையில் அமைதி திரும்ப இரு நாட்டு ராணுவ அதிகாரிகளும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடத்தினர். இதனால் ஓரளவு நல்ல பயன் கிடைத்தது. பதற்றமான பகுதிகளில் கூடுதலாக குவிக்கப்பட்டு இருந்த இரு நாடு படை வீரர்களும், அவர்களின் ராணுவ டாங்கிகளும் விலக்கிக் கொண்டன. முதலில் 11 கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்தன.

Recommended Video

    Russia-வில் நடக்கும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு.. முக்கியத்துவம் பெறும் Taliban
    நல்ல முன்னேற்றம்

    நல்ல முன்னேற்றம்

    இந்திய சீன ராணுவ வீரர்கள் இடையே கடைசியாக 12-வது சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது லடாக் எல்லையில் கோக்ரா, ஹாட் ஸ்பிரிங் பகுதிகளில் இருந்து தங்களது படைகளை விலக்கி கொள்ள முடிவு எடுத்ததாக கூறப்படுகிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு மிக நல்ல முன்னேற்றம் கிடைத்தது.

    பேச்சுவார்த்தை தோல்வி

    பேச்சுவார்த்தை தோல்வி

    இந்த நிலையில் இந்தியா-சீனா ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 13-வது பேச்சுவார்த்தை நேற்று நடந்தது. நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 7 மணி வரை சுமார் 9 மணி நேரம் நீடித்தது. எல்லை பகுதிகளில் ​​மீதமுள்ள இடங்களில் இரு தரப்பு படைகளை விலக்கி கொள்வதற்காக இந்தியா ஆக்கபூர்வமான வாதங்களை முன்வைத்தது. இரு தரப்பின் நிலையை மாற்றுவதற்கான சீனாவின் ஒருதலைப்பட்ச முயற்சிகளை இந்தியா சுட்டிக்காட்டியது. ஆனால் இந்திய தரப்பின் கோரிக்கையை சீனத் தரப்பு ஏற்கவில்லை என்றும் இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தகவலை ராணுவ அதிகாரிகள் சிலர் கூறினார்கள்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+