'ரத்ததானம்' செய்ய அனுமதியுங்கள்.. சுப்ரீம் கோர்ட்டை நாடிய 'திருநங்கைகள்'.. மத்திய அரசின் நிலைப்பாடு?
திருநங்கைகளும் ரத்த தானம் செய்யலாம் என்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு குறித்து மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
டெல்லி: திருநங்கைகளும் ரத்த தானம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
உலகம் முழுவதும் சாலை விபத்துகளில் 10 பேர் உயிரிழக்கிறார்கள் எனில் அதில் ஒரு உயிரிழப்பு இந்தியாவில்தான் ஏற்படுகிறது. இவ்வாறு இருக்கையில் விபத்துக்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை செய்து வருகிறது. இருப்பினும், அதிகரிக்கும் வாகனங்கள் எண்ணிக்கை, போதுமான சாலை வசதிகள் இல்லாதது போன்ற காரணத்தினால் விபத்துக்கள் தவிர்க்க முடியாததாய் இருக்கிறது. ஆனால் விபத்திலிருந்து மக்களை காப்பாற்ற ரத்த தானம் பெரிதும் உதவுகிறது.
ஆனால் ரத்த தானம் செய்வதற்கும் சில அடிப்படை தகுதிகள் இருக்கின்றன. அதாவது பச்சை குத்திக்கொண்டவர் 6 மாதங்கள் கழித்து ரத்த தானம் செய்ய வேண்டும். அதேபோல காது அல்லது மூக்கு குத்திகொள்பவர்கள் 24 மணி நேரம் கழித்து ரத்த தானம் செய்யலாம். பல் சிகிச்சை எடுத்துக்கொண்டவர்கள் ஒரு மாதம் கழித்து ரத்த தானம் செய்யலாம். இது தவிர மஞ்சள் காமாலை, காசநோய் இருப்பவர்கள் ரத்த தானம் செய்யமுடியாது.

வழக்கு
இந்நிலையில் இந்தியாவில் மூன்றாம் பாலினத்தவர்கள், தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் பெண் பாலியல் தொழிலாளர்கள் ஆகியோர் ரத்த தானம் செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. உலகின் பல நாடுகளில் இந்த தடை அமலில் இருக்கிறது. இந்நிலையில் திருநங்கைகள் ரத்த தானம் செய்வதை அங்கீகரிக்க வேண்டும் என்று மணிப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர் உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே கூறியிருந்தது.

பிரமாண பத்திரம்
இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை இன்று நீதிமன்றத்தில் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்திருக்கிறது. அதில், "மூன்றாம் பாலினத்தவர்கள்(திருநங்கைகள் உட்பட), தன்பாலின ஈர்ப்பாளர்கள் மற்றும் பெண் பாலியல் தொழிலாளர்கள் ஆகியோர் ரத்த தானம் செய்யக்கூடாது என்பதில் அரசு உறுதியாக இருக்கிறது" என கூறியுள்ளது. மேலும், "நமது அரசியலமைப்பு சட்டத்தில் ரத்த தானம் செய்பவர்களுக்கான வரையறைகளை வகுத்திருக்கிறது. இதில் மேற்குறிப்பிட்டவர்கள் வருகின்றனர். மட்டுமல்லாது இவர்களுக்கு எச்ஐவி, ஹெபடைடிஸ் பி அல்லது சி ஆகிய தொற்று பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

காரணம்
எனவே இவர்களிடமிருந்து ரத்தம் பெறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் மட்டுமல்லாது போதைக்காக ஊசி பயன்படுபவர்களிடமிருந்தும் ரத்தம் எடுக்க முடியாது" என்று கூறியுள்ளது. ஆனால், ஒருவரின் பாலின அடிப்படையில் ரத்த தானம் செய்யக்கூடாது என்று தடுப்பது முறையல்ல என மனுதாரர் கூறியிருக்கிறார். மட்டுமல்லாது இது அறிவியலுக்கு புறம்பானது என்றும் அவர் கூறியிருக்கிறார். எனவே இது தொடர்பான வழக்கு விசாரணை விரைவில் வர இருக்கிறது.

எதிர்ப்பு
இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் திருநங்கைகள் அதிக அளவில் பாலியல் தொழிலில்தான் ஈடுபடுத்தப்படுகின்றனர். இதனை தடுப்பதற்கு மத்திய மாநில அரசுகள் தொடர்ச்சியாக பல திட்டங்களை அறிவித்தாலும் இந்த திட்டங்கள் பெரும்பாலான திருநங்கைகளுக்கு போய் சேர்வதே கிடையாது. எனவே இந்த வழக்கு விசாரணையில் திருநங்கைகளின் வாழ்க்கை தரம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications