ரிலையன்ஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தம் ரத்து.. மத்திய அரசு அதிரடி. பரபர பின்னணி
டெல்லி: இந்திய கடற்படைக்கு தேவையான போர்க்கப்பல்களை கட்டித்தருவதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்துடன் போட்ட ஒப்பந்தத்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. 5 போர் கப்பல்களை கட்டித்தருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
Recommended Video
ரோந்துப்பணிகள் மேற்கொள்வதற்காக இந்திய கடற்படைக்க 5 போர் கப்பல்களை கட்டித்தர முந்தைய பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில், மத்திய அரசு டெண்டர் விட்டது.
இதில் வெற்றி பெற்ற குஜராத்தை சேர்ந்த 'பிபவாவ் டிபன்ஸ் அண்ட் ஆப்ஷோர் என்ஜினீயரிங் லிமிடெட்' நிறுவனத்துடன் ரூ.2,500 கோடி மதிப்பில் மத்திய அரசு 2011ம் ஆண்டில் ஒப்பந்தம் போட்டது.

போர்க்கப்பல் ஒப்பந்தம்
இதனிடையே நிகில் காந்தி என்பவரால் நடத்தப்பட்ட ‘பிபவாவ் டிபன்ஸ் அண்ட் ஆப்ஷோர் என்ஜினீயரிங் லிமிடெட்' நிறுவனம் கடந்த 2015-ம் ஆண்டு, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்துக்கு கைமாறியது. மேலும் அந்த நிறுவனத்தின் பெயரும், ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினீயரிங் என மாற்றம் செய்யப்பட்டது. இதன்காரணமாக இந்திய கடற்படைக்கு போர் கப்பல்களை கட்டும் ஒப்பந்தமும், பணியும் ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினீயரிங் நிறுவனத்தின் வசம் வந்தது.

கால தாமதத்தால் ரத்து
ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் போர் கப்பல் களை கட்டித்தராமல் ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினீயரிங் நிறுவனம் தாமதப்படுத்தி வந்தது.. இதன் காரணமாக போர் கப்பல்களை கட்டுவதற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு 2 வாரங்களுக்கு முன் ரத்து செய்துள்ளது. அந்த தகவல் தற்போது தான் கசிந்துள்ளது.

நிதி நெருக்கடியில் தவிப்பு
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம், ரூ.11 ஆயிரம் கோடி கடன்களால் தவித்து வருகிறது. கடன்களை தீர்ப்பதற்கான பணியில் தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயத்தில் முறையிட்டுள்ளது.இந்த சூழ்நிலையில், இந்திய கடற்படைக்கு கப்பல் கட்டித்தரும் ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்திருப்பது, ரிலையன்ஸ் குழுமத்தின் கடன்களை தீர்க்க தேசிய கம்பெனி சட்ட தீர்ப்பாயம் மேற்கொள்ளும் நடவடிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.

இந்திய நிறுவனங்கள் ஆர்வம்
நிதி பிரச்சனை காரணமாக தவிக்கும் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தின் வசம் உள்ள ரிலையன்ஸ் நேவல் அண்ட் என்ஜினீயரிங் நிறுவனத்தை கையகப்படுத்திக்கொள்வதற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த 12 கம்பெனிகள் விருப்பம் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications