மதமாற்ற விவகாரம் தொடர்பான மனுக்கள்.. இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
டெல்லி: மதமாற்றம் தொடர்பான பல்வேறு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) விசாரணை நடைபெறவுள்ளது. அந்த மாநிலங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது மனுவை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் கடந்த 2023 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, மதமாற்றம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.
இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் மதமாற்ற தடுப்புச் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இந்த சட்டத்துக்கு எதிராக சில மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும் என்று கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கேவி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்கள் மீதான விசாரணை மேற்கொள்ளவுள்ளது.
இதில், மோசடி செய்து மதமாற்றம் செய்வதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வலியுறுத்தி அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது கடந்த 2023 ஜனவரி மாதம் விசாரணை நடைபெற்றது. அப்போது, மதமாற்றம் என்பது கவலைக்குரிய விஷயம். இந்த விஷயத்தில் அரசியல் சாயம் பூசக் கூடாது என்று அறிவுறுத்தியது உச்ச நீதிமன்றம். மேலும், இந்த மனு தொடர்பாக மனுதாரர் விளக்கமளிக்கவும் உத்தரவிடப்பட்டது.
கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளை அச்சுறுத்தும் விதமாக குற்ற வழக்கில் சிக்கவைக்கும் வகையில், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டங்கள் இயற்றப்பட்டதாக ஜமாயித் உலாமா ஏ ஹிந்த் அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஹிமாசல பிரதேச உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள், அலகாபாத் நீதிமன்றத்தில் 5 மனுக்கள், மத்திய பிரதேசத்தில் 7 மனுக்கள், கர்நாடகம், உத்ரகாண்டில் ஒரு மனு என பல்வேறு மனுக்கள் நிலைவியில் உள்ளது.
மதமாற்றம் தொடர்பாக இதுபோன்று பல்வேறு மனுக்கள் அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டப் பிரிவுகளு்கு தடை விதித்த உயர்நீதிமன்றங்களின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக மாநில அரசுகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களும் நிலுவையில் உள்ளன.
அந்த மாநிலங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது மனுவை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் கடந்த 2023 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, மதமாற்றம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.
-
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
போரில் ‘என்ட்ரி'யான ரஷ்யா.. அரபு நாடுகளை ஈரான் தாக்கியது எப்படி? டிரம்பை கதறவிடும் புதின்! -
தங்கப் பத்திரம் சேமிப்பு திட்டத்தில் ரிசர்வ் வங்கி ஜாக்பாட்.. ₹1 லட்சம் போட்டால் ₹3.48 லட்சம் லாபமா?












Click it and Unblock the Notifications