மதமாற்ற விவகாரம் தொடர்பான மனுக்கள்.. இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
டெல்லி: மதமாற்றம் தொடர்பான பல்வேறு மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று (புதன்கிழமை) விசாரணை நடைபெறவுள்ளது. அந்த மாநிலங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது மனுவை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் கடந்த 2023 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, மதமாற்றம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.
இந்தியாவில் உள்ள சில மாநிலங்களில் மதமாற்ற தடுப்புச் சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. இந்த சட்டத்துக்கு எதிராக சில மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல, கட்டாய மதமாற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்க வேண்டும் என்று கோரியும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கேவி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுக்கள் மீதான விசாரணை மேற்கொள்ளவுள்ளது.
இதில், மோசடி செய்து மதமாற்றம் செய்வதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வலியுறுத்தி அட்டர்னி ஜெனரல் ஆர் வெங்கடரமணி என்பவர் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது கடந்த 2023 ஜனவரி மாதம் விசாரணை நடைபெற்றது. அப்போது, மதமாற்றம் என்பது கவலைக்குரிய விஷயம். இந்த விஷயத்தில் அரசியல் சாயம் பூசக் கூடாது என்று அறிவுறுத்தியது உச்ச நீதிமன்றம். மேலும், இந்த மனு தொடர்பாக மனுதாரர் விளக்கமளிக்கவும் உத்தரவிடப்பட்டது.
கலப்புத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகளை அச்சுறுத்தும் விதமாக குற்ற வழக்கில் சிக்கவைக்கும் வகையில், உத்தரபிரதேசம், குஜராத் உள்ளிட்ட சில மாநிலங்களில் சட்டங்கள் இயற்றப்பட்டதாக ஜமாயித் உலாமா ஏ ஹிந்த் அமைப்பும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
ஹிமாசல பிரதேச உயர் நீதிமன்றத்தில் 3 மனுக்கள், அலகாபாத் நீதிமன்றத்தில் 5 மனுக்கள், மத்திய பிரதேசத்தில் 7 மனுக்கள், கர்நாடகம், உத்ரகாண்டில் ஒரு மனு என பல்வேறு மனுக்கள் நிலைவியில் உள்ளது.
மதமாற்றம் தொடர்பாக இதுபோன்று பல்வேறு மனுக்கள் அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டப் பிரிவுகளு்கு தடை விதித்த உயர்நீதிமன்றங்களின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக மாநில அரசுகள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்களும் நிலுவையில் உள்ளன.
அந்த மாநிலங்களில் நிலுவையில் உள்ள மனுக்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது மனுவை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் கடந்த 2023 ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து, மதமாற்றம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெறவுள்ளது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications