ஜம்மா மசூதியின் குரல்.. நாடு முழுக்க எதிரொலிக்கும்.. நான் வந்துவிட்டேன்.. சந்திரசேகர் ஆசாத் அறைகூவல்
டெல்லியில் ஜம்மா மசூதியில் நடக்கும் சிஏஏ போராட்டத்தின் குரல் நாடு முழுக்க எதிரொலிக்கும் என்று பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் தெரிவித்துள்ளார்.
Recommended Video
டெல்லி: டெல்லியில் ஜம்மா மசூதியில் நடக்கும் சிஏஏ போராட்டத்தின் குரல் நாடு முழுக்க எதிரொலிக்கும் என்று பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத் தெரிவித்துள்ளார்.
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுக்க போராட்டம் நடந்து வருகிறது. டெல்லியில் ஜம்மா மசூதியில் கடந்த டிசம்பர் 21ம் தேதி பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் அசாத் போராட்டம் நடத்தினார். இதனால் அவர் கைது செய்யப்பட்டார்.
இதையடுத்து பீம் ஆர்மி தலைவர் சந்திரசேகர் ஆசாத்திற்கு ஜாமீன் வழக்கில் டெல்லி நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. பெயிலில் வந்த இவர் தற்போது மீண்டும் டெல்லியில் ஜம்மா மசூதி அருகே போராட்டம் செய்து வருகிறார்.

என்ன பேட்டி
இந்த நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நான் மீண்டும் வந்துவிட்டேன். என்னுடைய போராட்டம் தொடரும். அமைதியான போராட்டம்தான் நம்முடைய பலம். எல்லா மதத்தை சேர்ந்த மக்களும் இங்கு இருக்கிறார்கள்.

ஒற்றுமை
இந்தியா ஒற்றுமையாக இருக்கிறது என்பதற்கு இதுதான் சான்று. பல மதங்களை சேர்ந்த மக்கள் இங்கே வந்து இருக்கிறார்கள். இதுதான் இந்தியா. இப்போது அரசுக்கு தெரியும் இது வெறும் இஸ்லாமிய போராட்டம் இல்லை என்று.

நாடு அரசு
நம்முடைய நாட்டையும், அரசியலமைப்பையும் காப்பாற்ற வேண்டியது நம்முடைய கடமை. அதை நாங்கள் செய்கிறோம். ஜம்மா மசூதியில் இருந்து ஒரு குரல் எழுந்துள்ளது. அந்த குரல் கொடுக்கும் செய்தியை நாடு முழுக்க, உலகம் முழுக்க கொண்டு செல்லும். நாடு முழுக்க இந்த போராட்டத்தை நாங்கள் கொண்டு செல்வோம்.

கொண்டு செல்வோம்
சிஏஏவிற்கு எதிராக ஷாஹீன் பாக் பகுதியில் பெண்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு என் சல்யூட். இதை தீவிரமாக எதிர்த்து போராடி வரும் அலிகார்க் முஸ்லீம் பல்கலைக்கழகம் , ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், ஜேஎன்யூ அனைத்திற்கும் நன்றி, என்று சந்திரசேகர் ஆசாத் குறிப்பிட்டுள்ளார்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications