பாஜகவில் தேர்தல் நடைமுறை இல்லவே இல்லை.. பிரதமர் மோடியை விமர்சனம் செய்த மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி
டெல்லி: பாஜகவின் முக்கிய பதவிகள், நிர்வாகிகள் தேர்தல் இன்றி பிரதமர் நரேந்திர மோடியின் அனுமதியுடன் நடப்பதாகவும், பாஜகவில் தேர்தல் மறைந்து போய்விட்டதாகவும் அக்கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கடுமையாக விமர்சனம் செய்துள்ளது.
Recommended Video
பாஜகவின் மூத்த தலைவராக இருப்பவர் சுப்பிரமணியசாமி. இவர் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களை தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகிறார்.
குறிப்பாக இந்திய பொருளாதார கொள்கை, இந்தியா-சீனா இடையேயான எல்லை பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை குறிப்பிட்டு சுப்பிரமணியசாமி தனது கருத்துகளை கூறி வருகிறார்.

சுப்பிரமணியசாமி மீண்டும் விமர்சனம்
இந்நிலையில் தான் தற்போது மீண்டும் விமர்சனம் செய்துள்ளார். இந்த முறை பாஜகவில் தேர்தல் இன்றி நிர்வாகிகள் பிரதமர் நரேந்திர மோடியின் ஒப்புதலுடன் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதனால் பாஜகவின் தேர்தல் இல்லாத நிலை உள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுபற்றி சுப்பிரமணியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

பாஜகவில் தேர்தலே இல்லை
‛‛ ஜனதா கட்சி மற்றும் பாஜகவின் துவக்க காலத்தில் நாங்கள் கட்சி மற்றும் நாடாளுமன்ற ஆட்சிக்குழு உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்வு செய்தோம். கட்சியின் அரசியலமைப்புக்கு இது நிச்சயம் தேவை. ஆனால் இன்று பாஜகவில் தேர்தல் இல்லை. ஒவ்வொரு பதவிக்கும் மோடியின் ஒப்புதலுடன் ஒரு உறுப்பினர் நியமிக்கப்படுகிறார்'' என விமர்சனம் செய்துள்ளார்.

விமர்சனம் ஏன்?
இந்நிலையில் பாஜகவின் நாடாளுமன்ற குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பாஜகவில் பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை இந்த குழு எடுக்க உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவின் தேசிய தலைவர் ஜேபி நட்டா மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர். புதிதாக கர்நாடக முன்னாள் முதல் அமைச்சர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் சர்பானந்தா சோனோவால் உள்பட 7 பேர் நேற்று நியமனம் செய்யப்பட்டனர்.

நிதின் கட்கரி நீக்கம்
அதேநேரத்தில் பாஜகவின் நாடாளுமன்ற குழுவில் இருந்து மத்திய அமைச்சருமான நிதின் கட்கரி, மத்திய பிரதேச முதல் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் நாடாளுமன்ற குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். மேலும் மகாராஷ்டிரா துணை முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், பாஜகவின் தேசிய பொது செயலாளர் பூபேந்திர யாதவ், ஓம் மாத்தூர், பாஜகவின் மகளிர் அணி தேசிய தலைவரான தமிழகத்தை சேர்ந்த எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோர் கட்சியின் மத்திய தேர்தல் கமிட்டி (சிஇசி) உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தான் சுப்பிரமணியசாமி விமர்சனம் செய்துள்ளார்.
-
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
அசைக்க முடியாத சாதனையைச் செய்த மோடி! 8,931 நாள் அரசு பதவி! உலக அளவில் உயரும் டிஜிட்டல் செல்வாக்கு! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்? -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
சாத்தூர் தொகுதியில் போட்டியா? எங்கும் போட்டியிடுவேன்.. நயினார் நாகேந்திரன் நேரடியாக சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications