டெல்லியில் 14 வயது பெண்புலி கல்பனா மரணம்- கொரோனா சோதனையில் ரத்த மாதிரிகள்!
டெல்லி: டெல்லி பூங்காவில் 14 வயது பெண்புலி கல்பனா சிறுநீரக கோளாறு காரணமாக உயிரிழந்தது. தற்போது அதன் ரத்தமாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் மனிதகுலத்தை நாசமாக்கி வருகிறது கொரோனா வைரஸ். அதேநேரத்தில் புலி, பூனை ஆகியவையும் கொரோனாவால் பாதித்திருக்கலாம்; மரணித்திருக்கலாம் என செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அமெரிக்காவின் நியூயார்க்கில் 8 புலிகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதும் உறுதியானது. இந்நிலையில் டெல்லியில் பூங்கா ஒன்றில் பராமரிக்கப்பட்ட 14 வயது பெண் புலி கல்பனா உயிரிழந்தது.
சிறுநீரக கோளாறால் பெண்புலி கல்பனா மரணமடைந்தது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து புலியின் உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது.
அதேநேரத்தில் நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் உள்ளது. இதனால் பெண்புலியின் மாதிரிகள் கொரோனா சோதனைக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications