டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு கொரோனா.. பெரும் பதற்றத்தில் குற்றவாளி.. திகார் சிறையில் டெஸ்ட்

Google Oneindia Tamil News

டெல்லி: பாலியல் பலாத்காரத்திற்குள்ளான பெண்ணுக்கு கொரோனா உறுதியான நிலையில் அவரை பலாத்காரம் செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் இதுவரை வரவில்லை.

டெல்லியில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு திகார் சிறை 2 -ல் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

Tihar Prison inmate tested for infection after he raped Covid positive woman

இதையடுத்து தகவலறிந்த சிறைத் துறை நிர்வாகம் அந்த பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சிறையில் இருக்கும் கைதிக்கு கொரோனா சோதனை எடுத்தது. அது போல் அவருடன் ஒரே செல்லில் தங்கியிருந்த இன்னொரு கைதிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இதுகுறித்து சிறை துறை நிர்வாகம் கூறுகையில் சிறையில் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு வருகிறது.அது போல் புதிதாக சிறைக்கு கைதிகளாக வருவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

கொரோனா லாக்டவுன் - வெளியூர் செல்ல அனுமதி கோரிய 3,48, 210 விண்ணப்பங்களுக்கு அனுமதி- தமிழக அரசு கொரோனா லாக்டவுன் - வெளியூர் செல்ல அனுமதி கோரிய 3,48, 210 விண்ணப்பங்களுக்கு அனுமதி- தமிழக அரசு

எனவே இதுகுறித்து மற்ற கைதிகளோ அவர்களது குடும்பத்தினரோ கவலைப்பட தேவையில்லை என்றார். திகார் சிறை எண் 2-இல்தான் நிழல் உலக தாதா ஷாஹாபுதூனும் சோட்டா ராஜனும் அடைக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களுக்கும் மற்ற சிறை கைதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Tihar Prison inmate tested for covid 19 and awaiting for the results after he raped the woman who tested positive.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X