பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு கொரோனா.. பெரும் பதற்றத்தில் குற்றவாளி.. திகார் சிறையில் டெஸ்ட்
டெல்லி: பாலியல் பலாத்காரத்திற்குள்ளான பெண்ணுக்கு கொரோனா உறுதியான நிலையில் அவரை பலாத்காரம் செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதன் முடிவுகள் இதுவரை வரவில்லை.
டெல்லியில் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு திகார் சிறை 2 -ல் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் அந்த பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இதையடுத்து தகவலறிந்த சிறைத் துறை நிர்வாகம் அந்த பெண்ணை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக சிறையில் இருக்கும் கைதிக்கு கொரோனா சோதனை எடுத்தது. அது போல் அவருடன் ஒரே செல்லில் தங்கியிருந்த இன்னொரு கைதிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை. இதுகுறித்து சிறை துறை நிர்வாகம் கூறுகையில் சிறையில் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு வருகிறது.அது போல் புதிதாக சிறைக்கு கைதிகளாக வருவோருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
எனவே இதுகுறித்து மற்ற கைதிகளோ அவர்களது குடும்பத்தினரோ கவலைப்பட தேவையில்லை என்றார். திகார் சிறை எண் 2-இல்தான் நிழல் உலக தாதா ஷாஹாபுதூனும் சோட்டா ராஜனும் அடைக்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களுக்கும் மற்ற சிறை கைதிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications