2029 லோக்சபா தேர்தலில் மீண்டும் விளையாடுவோம்.. இப்ப மக்களுக்காக ஒன்றாக பாடுபடுவோம்.. மோடி அழைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: லோக்சபா தேர்தல் கால யுத்தம் முடிவடைந்துவிட்டது; இனி 2029-ம் ஆண்டு லோக்சபா தேர்தல் காலத்தின் மீது அனைத்து அரசியல் கட்சிகளும் மீண்டும் விளையாடுவோம்; அதுவரை இந்த நான்கரை ஆண்டுகளும் மக்கள் நலனுக்காக அரசுடன் இணைந்து அனைத்து அரசியல் கட்சிகளும் பாடுபட வேண்டும் என்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: 60 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரே அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக பொறுப்பேற்றிருப்பது மிகுந்த பெருமிதத்திற்குரியது. மூன்றாவது முறையாக பொறுப்பேற்றுள்ள அரசு, பட்ஜெட் தாக்கல் செய்வதை மதிப்பு வாய்ந்ததாக இந்த நாடு பார்க்கிறது. இந்த பட்ஜெட் அமிர்த காலத்திற்கான ஒரு மைல்கல் பட்ஜெட்.

budget 2024 Narendra Modi 2024

வளர்ச்சியடைந்த பாரதம்: மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு பாடுபட்டு வருகிறது. இந்த பட்ஜெட், தற்போதைய அரசுக்கு அடுத்த ஐந்தாண்டுகளுக்கு வழிகாட்டுவதுடன், 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவை நனவாக்குவதற்கான வலுவான அடித்தளமாகவும் அமையும்.

8% பொருளாதார வளர்ச்சி: கடந்த மூன்றாண்டுகளாக 8% தொடர் வளர்ச்சியுடன், இந்தியா, பெரிய பொருளாதார நாடுகளில் வேகமாக வளரும் நாடாக உருவெடுத்துள்ளது. தற்போது, ஆக்கப்பூர்வ எதிர்பார்ப்பு, முதலீடு மற்றும் செயல்திறன் காரணமாக ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன.

2029-ல் விளையாடுவோம்: அனைத்து யுத்தங்களும் தற்போது அரசியல் கட்சிகளிடையே நடந்திருந்தாலும், லோக்சபா தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மக்கள் இந்த அரசைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நாட்டிற்காக போராட முன் வர வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும், கட்சி அரசியலைத் தாண்டி, அடுத்த நான்கரை ஆண்டுகளுக்கு நாடாளுமன்றம் எனும் கண்ணியமான அமைப்பை பயன்படுத்தி, நாட்டிற்காக பாடுபட உறுதியேற்க வேண்டும். “2029 ஜனவரியில் தேர்தல் களத்திற்குச் செல்லுங்கள்”. அதுவரை நாட்டிற்கும், அதன் ஏழைகள், விவசாயிகள், பெண்கள், இளைஞர்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்க வேண்டும். 2047-க்குள் வளர்ச்சியடைந்த பாரதம் என்ற கனவை நனவாக்குவதற்கான எந்த வாய்ப்புகளையும் விட்டுவிடக்கூடாது.

5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 8% வளர்ச்சி.. நாடாளுமன்ற வளாகத்தில் மோடி பெருமிதம்!


எதிர்மறை அரசியல்: சில அரசியல் கட்சிகளின் எதிர்மறை அரசியல் காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர், அவர்களது கருத்துக்கள் மற்றும் தொகுதிப் பிரச்சனைகளை தெரிவிப்பதற்கான வாய்ப்புகளை பெற முடியவில்லை. அனைத்து உறுப்பினர்களும், குறிப்பாக முதல் முறையாக வெற்றி பெற்றுள்ள உறுப்பினர்கள், அவர்களது கருத்துக்களை தெரிவிக்க வாய்ப்பளிக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றும் உரையை தடுப்பதற்காக, பலத்தை காட்டும் முயற்சிகள் நடைபெறுகின்றன. ஜனநாயக பாரம்பரியத்தில் இதற்கு இடமில்லை.

அரசியல் அஜெண்டா அல்ல: நாட்டிற்காகப் பணியாற்றுவதற்காகத்தான் மக்கள் வாக்களித்துள்ளனரே தவிர, அரசியல் கட்சிகளின் செயல் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக அல்ல. இந்த அவை அரசியல் கட்சிகளுக்கானதல்ல, மாறாக நாட்டிற்கானது. இது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக சேவையாற்றும் அமைப்பு அல்ல. மாறாக 140 கோடி இந்திய மக்களுக்கு சேவையாற்றுவதற்கானது.

ஆக்கப்பூர்வ விவாதம்: நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆக்கப்பூர்வ விவாதங்களில் பங்கேற்பார்கள். நாட்டை முன்னெடுத்து செல்வதற்கான ஆக்கப்பூர்வ கருத்துக்களைத் தான் நாடு எதிர்பார்க்கிறது.
எதிர் கருத்துக்கள் மோசமானவை அல்ல, மாறாக வளர்ச்சியை தடுக்கக்கூடிய எதிர்மறை கருத்துகள் தான் மோசமானவை. ஜனநாயகத்தின் கோயிலாக கருதப்படும் நாடாளுமன்றத்தை சாமான்ய மக்களின் விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்த வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+