யு.கேவிலிருந்து வரும் பிரிட்டிஷ் மக்களுக்கு.. 10 நாட்கள் தனிமைப்படுத்துதல் கட்டாயம்.. இந்தியா பதிலடி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா வரும் பிரிட்டிஷ் குடிமக்கள் அனைவரும் 10 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. வேக்சின் போட்டு இருந்தாலும் இந்த கட்டுப்பாடுகள் பிரிட்டிஷ் மக்களுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு எதிராக யு.கே விதித்த கொரோனா கட்டுப்பாட்டு விதிகளுக்கு பதிலடியாக இப்போது மத்திய அரசு இந்த புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொரோனா கட்டுப்பாட்டு விதிகளில் யுகே தொடக்கத்தில் இருந்தே ஆசிய நாடுகளுக்கும், வளரும் நாடுகளுக்கும் எதிராக விதிமுறைகளை அறிவித்து வருகிறது.

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம்-ஆஸ்டராசெனகா வேக்சினைத்தான் யுகே பயன்படுத்தி வருகிறது. இந்தியாவும் அதே வேக்சினைத்தான் கோவிஷீல்ட் என்ற பெயரில் பயன்படுத்தி வருகிறது.

 கோவிஷீல்ட்

கோவிஷீல்ட்

ஆனால் இந்த கோவிஷீல்ட் வேக்சினுக்கு அனுமதி அளிக்க யுகே தொடக்கத்தில் மறுத்துவிட்டது. பல மாதங்களுக்கு இந்தியாவின் கோவிஷீல்ட் வேக்சினுக்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது. அதன்பின் இந்தியாவின் பல கட்ட கோரிக்கைக்கு பின் யுகே இந்தியாவின் கோவிஷீல்ட் வேக்சினுக்கு அனுமதி அளித்தது.

யுகே

யுகே

ஆனால் கோவிஷீல்ட் வேக்சினுக்கு அனுமதி அளித்தாலும் கூட ஆசிய நாடுகளுக்கு இன்னும் கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்தவில்லை. இந்தியாவில் கோவிஷீல்ட் வேக்சின் போட்டுவிட்டு யுகே சென்றாலும் கூட அவர்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் யுகே தெரிவித்தது.அதன்படி இந்தியாவில் இருந்து வந்தால் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும், கொரோனா டெஸ்ட் சான்றிதழை காண்பிக்க வேண்டும் என்று யுகே தெரிவித்தது.

கட்டுப்பாடு

கட்டுப்பாடு

அதேபோல் ஒவ்வொரு ஆசிய நாட்டிற்கும் ஏற்றபடி 10 நாட்கள் முதல் 20 நாட்கள் வரையிலும் கட்டுப்பாடுகளை யுகே விதித்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல், ஆஸ்திரேலியா போன்ற வளர்ந்த நாடுகளில் இருந்து வரும் வேக்சின் போட்ட மக்களுக்கு மட்டும் தனிமைப்படுத்தல் விதி கிடையாது என்று யுகே தளர்வுகளை அறிவித்தது. இந்தியாவிற்கு எதிரான கட்டுப்பாட்டு விதிகளை தளர்த்த வேண்டும் என்று யுகேவிடம் இந்தியா கோரிக்கை வைத்தது. ஆனால் யுகே இந்தியாவின் கோரிக்கையை ஏற்கவில்லை.

காலனி ஆதிக்கத்தின் நீட்சி

காலனி ஆதிக்கத்தின் நீட்சி

இதையடுத்து யுகேவின் இந்த செயல் காலனி ஆதிக்கத்தின் நீட்சி. யுகேவின் இந்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று இந்தியா விமர்சனம் செய்தது. இந்த நிலையில் புதிய திருப்பமாக இந்தியா வரும் பிரிட்டிஷ் குடிமக்கள் அனைவரும் 10 நாட்கள் கண்டிப்பாக தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியா சோதனை

இந்தியா சோதனை

வேக்சின் போட்டு இருந்தாலும் இந்த கட்டுப்பாடுகள் பிரிட்டிஷ் மக்களுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு யுகேவில் இருந்து வரும் பிரிட்டிஷ் மக்கள் 72 மணி நேரத்திற்கு உள்ளாக எடுக்கப்பட்ட கொரோனா டெஸ்ட் முடிவுகளை காண்பிக்க வேண்டும் என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவிற்கு எதிரான யுகேவின் செயலுக்கு பதிலடி தரும் விதமாக இந்தியா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+