இந்தியாவில் கொரோனாவுக்கு 2-வது எம்.எல்.ஏ. பலி- திரிணாமுல் எம்.எல்.ஏ. தமோனாஷ் கோஷ் மரணம்
டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு 2-வது எம்.எல்.ஏ. ஒருவர் உயிரிழந்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ. தமோனாஷ் கோஷ் (வயது 60) கொரோனாவால் காலமானார்.
இந்தியா முழுவதும் கொரோனாவின் உக்கிர தாண்டவம் ஆயிரக்கணக்கான உயிர்களை குடித்து வருகிறது. கொரோனாவுக்கு தமிழகத்தில் திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் பலியானார்.
இந்தியாவிலேயே கொரோனாவுக்கு பலியான முதல் எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன். அவரது மரணம் தமிழகத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. தமோனாஷ் கோஷ் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி காலமானார். மேற்கு வங்கத்தின் பால்டா தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் கோஷ்.
கிட்ட போவாராம்.. கட்டிப் பிடிப்பாராம்.. காசிக்கே டஃப் கொடுத்த கவுதம்.. குமரியில் இன்னொரு கலாட்டா!
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொருளாளராகவும் பதவி வகித்தவர் கோஷ். அவரது மறைவு மேற்கு வங்கத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி, 33 ஆண்டுகாலம் எங்களுடன் இருந்தவர். அர்ப்பணிப்புடனேயே கட்சிப் பணியையும் மக்கள் பணியையும் ஆற்றியவர். கோஷின் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.