ராஜஸ்தானில் கெலாட்டை ஆதரிக்குமாறு நெருக்கமான காங். எம்எல்ஏக்களிடம் வசுந்தரா ராஜே பேசினாரா? பரபரப்பு
டெல்லி: ராஜஸ்தானில் நெருக்கடியில் சிக்கியுள்ள முதல்வர் அசோக் கெலாட்டை ஆதரிக்குமாறு தனக்கு நெருக்கமாக உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களிடம் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா பேசியதாக பாஜக கூட்டணி பேசியருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசின் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும், அக்கட்சியின் முன்னாள் துணை முதல்வரான சச்சின் பைலட்டுக்கும் அதிகார மோதல் முற்றியது. இதனால் அவர் அசோக் கெலாட்டுக்கு எதிராக 19 எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தினார். இதனால் கடந்த 14ந்தேதி சச்சின் பைலட்டின் துணை முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்,.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக ராஜஸ்தான் அரசியலில் பெரும் குழப்பம் நிலவி வருகிறது. இந்த சூழலில் பாஜகவில் தான் சேரப்போவதில்லை என்று சச்சின் பைலட் அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராகவே தான் தொடருவேன் என்றும் அறிவித்துள்ளார்.

சமாதான முயற்சி
இதற்கிடையே ராகுல் காந்தி, சச்சின் பைலட்டிற்கு உரிய முக்கியத்துவம் அளித்து சமாதானம் செய்ய முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் முடிவுக்கு வருமா என்ற பரபரப்பு நிலவுகிறது.

பாஜக கூட்டணி கட்சி குற்றச்சாட்டு
இந்நிலையில் பாஜகவின் மூத்த தலைவரும், ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வருமான வசுந்தரா ராஜே, முதல்வர் அசோக் கெலாட்டுக்கு உதவ முயற்சிப்பதாக ராஜஸ்தானில் உள்ள பாஜகவின் கூட்டணி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ராஷ்டிரிய லோக்தாந்த்ரிக் கட்சியின் லோக்சபா எம்பியான ஹனுமான் பெனிவால் இதுபற்றி டுவிட்டரில் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.

கெலாட்டுக்கு உதவுங்கள்
"முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே அவருக்கு நெருக்கமான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை அழைத்து அசோக் கெலாட்டை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.. சிகார் மற்றும் நாகூரில் உள்ள ஒவ்வொரு ஜாட் எம்.எல்.ஏ.வையும் அழைத்து சச்சின் பைலட்டிடமிருந்து விலகி இருக்குமாறு கேட்டிருக்கிறார், இதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது, என்று ஹனுமான் பெனிவால் குறிப்பிட்டுள்ளார். வசுந்தரா ராஜே கெலாட்டுக்கு உதவுவதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய உதவியாளர்கள் கூறியுள்ளனர், எனவே அசோக் கெலாட்டின் அரசு கவிழாது என்றும் கூறினார்..

இப்படி பேச வேண்டாம்
ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் புனியா இதை திட்டவட்டமாக மறுத்துள்ளார். வசுந்தரா ராஜே எங்கள் மரியாதைக்குரிய தலைவர் அவரை பற்றி இப்படியெல்லாம் அறிக்கை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றார்.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications