டெல்லியை படாதபாடு படுத்தி பதம்பார்ப்பது பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸ்!
டெல்லி: டெல்லியில் பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் இருப்பதாக என்.சி.டி.சி. எனப்படும் நோய் கட்டுப்பாட்டுக்கான தேசிய மையம் எச்சரித்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய இணையவழி கருத்தரங்கில் என்.சி.டி.சி. இயக்குநர் சுஜீத்குமார் சிங் பங்கேற்று கொரோனா ஆய்வுகள் தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டார். அப்போது, டெல்லியில் மொத்தம் 3208 சோதனை மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அதில் பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 400 பேருக்கு இருப்பதாகவும் இந்தியாவின் உருமாறிய இரட்டை மரபணு வைரஸ் பாதிப்பு 76 பேருக்கும் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இருமடங்கு தாக்கம்
மேலும் மார்ச் 2-வது வாரத்தில் பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 28% ஆக இருந்தது; ஆனால் மார்ச் இறுதி வாரத்தில் இது 50% அதிகரித்ததாகவும் சுஜீத்குமார் சிங் தெரிவித்தார்.

பஞ்சாப், மகாராஷ்டிரா
இது தொடர்பாக சுஜீத்குமார் சிங் மேலும் கூறியதாவது: பஞ்சாப் மாநிலத்திலும் பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. மகாராஷ்டிராவில் உருமாறிய இரட்டை மரபணு கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் காணப்படுகிறது.

சோதனைகளும் ஆய்வுகளும்
பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசிலின் உருமாறி கொரோனா வைரஸ் பரவலுக்குப் பின் மொத்தம் 15,133 சோதனைகள் ஆய்வுக்குள்ளாக்கப்பட்டன. இதில் 1,735 உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டன.

மகாராஷ்டிராவில் பாதிப்பு
மகாராஷ்டிராவில் 1770 சோதனைகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 64 பேருக்கு இருந்தது தெரியவந்தது. டெல்லியில் 23 பேருக்கு தென்னாப்பிரிக்கா உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் நிலவரம்
பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 551 பேருக்கு பிரிட்டனின் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பும் தெலுங்கானாவில் இது 170 ஆகவும் இருந்தது. ஆனால் மேற்கு வங்கத்தில் தென்னாப்பிரிக்காவின் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு 124 ஆகவும் பிரிட்டன் வைரஸ் பாதிப்பு 40 ஆகவும் இருந்தது. இவ்வாறு சுஜீத்குமார் சிங் கூறினார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications