போர்க்களத்தில் எதற்காக காண்டம்? ஒவ்வொரு வீரரின் பாக்கெட்டிலும் "இது" இருக்குமாம்.. செம சர்ப்ரைஸ்
சென்னை: இந்த காலகட்டத்தில் எங்குத் திரும்பினாலும் நாம் போர் குறித்த தகவல்களையே பார்க்க வேண்டி இருக்கிறது. வளைகுடா, உக்ரைன் என வரிசையாகப் போர்களே வெடித்து வருகிறது. இந்த போர்க்களத்திற்குச் செல்லும் வீரர்கள், எப்போதும் துப்பாக்கி, ஆயுதங்களோடு சேர்ந்து ஆணுறைகளையும் கையோடு எடுத்துச் செல்வார்கள் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்!
போர்க்களம் என்றாலே நம் கண்ணுக்கு முன்னால் ரத்தமும், குண்டுகளும், துப்பாக்கிகளும்தான் வந்து நிற்கும். ஆனால், அந்த மரணப் போராட்டங்களுக்கு இடையிலும் ராணுவ வீரர்கள் தங்கள் சீருடைப் பைகளில் எப்போதும் ஒரு பொருளைத் தவறாமல் வைத்திருப்பார்கள். அது ஏதோ துப்பாக்கி, ஆயுதம், பணம் எல்லாம் இல்லை.. அது வேறு எதுவும் இல்லை.. காண்டம் அதாவது ஆணுறைகள்.

ஆணுறைகள்
இதைக் கேட்டவுடன் பலருக்குச் சிரிப்போ அல்லது ஆச்சரியமோ வரலாம். ஆனால், ஒரு ராணுவ வீரருக்கு இது வெறும் குடும்பக் கட்டுப்பாடு சாதனம் மட்டுமல்ல; அவனது உயிரைக் காக்கும் விஷயம் கருவி என்றே சொல்லலாம்.
எந்தவொரு போராக இருந்தாலும் களத்தில் வீரர்களின் முதல் எதிரி எதிரிநாட்டு ராணுவத்தினர் அல்ல.. அங்கிருக்கும் தட்பவெப்பநிலைதான். குறிப்பாக, புழுதி பறக்கும் பாலைவனங்களிலோ அல்லது சேறு நிறைந்த காடுகளிலோ துப்பாக்கிகளைப் பராமரிப்பது மிகப்பெரிய சவால். துப்பாக்கியில் குண்டு வெளியே வரும் குழலுக்குள் ஒரு சிறு மணல் துகள் புகுந்துவிட்டால் கூட, மிக முக்கியமான நேரத்தில் துப்பாக்கி வேலை செய்யாமல் போகலாம்.
துப்பாக்கிகள்
இந்தச் சிக்கலைத் தவிர்க்க, வீரர்கள் காண்டம்களைத் துப்பாக்கிக் குழலின் நுனியில் ஒரு கவசம் போல வைத்து மூடிக் கொள்வார்கள்.. சண்டைக்குத் தயாராகும் போது அதை எடுத்துவிட்டுச் சுடுவார்கள். எதிரி சட்டென வந்துவிட்டால் எப்படிச் சுட முடியும்.. அதை எடுக்க எல்லாம் டைம் இருக்குமா என்ற சந்தேகம் உங்களுக்கு வரும். ஆனால், அந்த ஆணுறை மிக மெல்லியதாக இருப்பதால், எதிரி தென்படும்போது அதை அகற்றாமலேயே சுட முடியும். குண்டு பாயும்போது அது காண்டமை கிழித்துக்கொண்டு தடையின்றி பாயும்!
பாதுகாக்கும்
துப்பாக்கிக்கு மட்டுமின்றி, வீரர்களின் தகவல்தொடர்பு சாதனங்களுக்கும் இது ஒரு சிறந்த பாதுகாவலனாக இருக்கிறது. போர்க்களத்தில் வரைபடங்கள், பேட்டரிகள் மற்றும் தீப்பெட்டிகள் ஆகியவை மழையிலோ அல்லது ஆற்று நீரிலோ நனைந்துவிட்டால் அது ஒட்டுமொத்தப் படைக்கும் அது ஆபத்தாக முடியும். தவறான இடத்திற்குச் சென்று மாட்டுவது கிட்டத்தட்ட நாமே நமது சவக்குழியை வெட்டுவது போலத் தான். எனவே, இந்த சாதனங்களைப் பராமரிக்க வேண்டியது முக்கியம்.
அதற்கும் ஆணுறைகள் கை கொடுக்கும். அதை ஒரு தற்காலிக 'வாட்டர் புரூஃப்' பைகளாக வீரர்கள் மாற்றிக் கொள்கிறார்கள். இதில் பொருட்களைப் போட்டு முடிச்சுப் போட்டுவிட்டால், அது நீருக்கு அடியில் சென்றாலும் உள்ளிருக்கும் பொருட்கள் நனையாது. இந்தியா பாகிஸ்தான் இடையே நடந்த 1971 போரில் கூட ஆணுறைகளை வைத்தே இந்தியா பல போர்த் தந்திரங்களைக் கையாண்டதாகவும் சொல்லப்படுகிறது.
கூச்சப்படும் பொருள்
கடற்படை வீரர்கள் வெடிமருந்துகளை நீரில் நனையாமல் எடுத்துச் செல்லவும், காயங்கள் ஏற்பட்டால் தொற்று ஏற்படாமல் தடுக்க முதலுதவி சாதனமாகவும் இதைப் பயன்படுத்தியுள்ளனர். நவீன மருத்துவ வசதிகள் கிடைக்காத போர் சூழலில், தற்காலிக மருத்துவக் கையுறைகளாகவும் இவை உருமாறுகின்றன. நம்ம ஊர் மெடிக்கல் ஷாப்பில் கேட்பதற்கே கூச்சப்படும் ஒரு பொருள், எல்லையில் எதிரிகளை எதிர்கொள்ளும் வீரர்களுக்கு ஒரு அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது என்பதுதான் நிதர்சனம்.
-
மோடியை கொல்ல சதி.. அலறிய அமெரிக்க CIA.. உடனே இந்தியாவுக்கு பறந்த மெசேஜ்.. 3 பேர் அதிரடியாக கைது -
கிட்டத்தட்ட எதிர்ப்பே இல்லை.. ஆனாலும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா சிக்கலில் மாட்டியுள்ளது ஏன்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
அசையாமல் ஆணி அடித்தார் போல நிற்க வைக்கும் 'ஸோம்பி' போதைப்பொருள்! பெங்களூரை தொடர்ந்து பீகாரிலும் ஷாக் -
ஒடிசாவுக்கு அடித்த ஜாக்பாட்.. ரூ.33 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் அதானி குழுமம்.. கரண் அதானி அறிவிப்பு -
தங்கத்திற்கு தடை.. ரஷ்ய உத்தரவால் தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் உயரபோகுது.. புடின் மெகா திட்டம்! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி












Click it and Unblock the Notifications