நாட்டின் பெயர் இனி "இந்தியா" இல்லை? "பாரத்"? நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தில் மத்திய அரசு தீர்மானம்?
டெல்லி: நாட்டின் "இந்தியா" என்ற பெயரை "பாரத்" அல்லது "பாரதம்" என மாற்றும் முயற்சியில் மத்திய அரசு பாஜக இறங்கிவிட்டது; நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் இதற்கான தீர்மானத்தை மத்திய அரசு கொண்டுவரக் கூடும் என எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளன.
லோக்சபா தேர்தலை எதிர்கொள்வதற்காக நாட்டின் பிரதான எதிர்க்கட்சிகள் அனைத்தும் இணைந்து "இந்தியா" என்ற கூட்டணியை உருவாக்கி உள்ளன. "இந்தியா" என கூட்டணிக்கு பெயர் வைத்தது முதலே மத்தியில் ஆளும் பாஜக அரசு கடுமையாக விமர்சித்து வருகிறது. மேலும் "இந்தியா" என உச்சரிப்பதற்கு பதிலாக "பாரதம்" என்ற சொல்லையே மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய பாஜக அரசு திடீரென நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்டியிருப்பதாக அறிவித்தது. செப்டம்பர் 18-ந் தேதி முதல் செப்டம்பர் 22 வரை இந்தக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்துக்கான செயல் திட்டம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
ஆனால் மத்திய அரசு கூட்டும் இந்தக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் மசோதா கொண்டுவரப்பட இருக்கிறது என்பது உறுதியாகி உள்ளது. அதாவது லோக்சபா, நாட்டின் அனைத்து மாநில சட்டசபைகளுக்கும் ஒரே தேர்தல் நடத்துவது என்பதுதான் மத்திய பாஜக அரசின் திட்டம். இதற்காக முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது.
இதனிடையே அண்மைக்காலமாக மத்திய அமைச்சர்கள் "பாரதம்" என்ற சொல்லை பயன்படுத்துகின்றனர். "இந்தியா" என்பதை தவிர்த்தும் வருகின்றனர். தற்போது ஜி.20 மாநாட்டில் பங்கேற்கும் விருந்தினர்களுக்கான அழைப்பிதழில் பாரத ஜனாதிபதி என இடம்பெற்றுள்ளது. பாஜக எம்பி ஹர்நாத் சிங் என்பவரும் நாட்டின் பெயரை பாரத் என பெயர் மாற்றம் செய்ய கோரி வருகிறார். இதற்கு முன்னர் பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத்தும் பாரத தேசம் என்றே அழைக்க வலியுறுத்தினார். தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவியும் பாரதம் என்ற சொல்லை பயன்படுத்தி வருகிறார்.
இதனால் மத்திய அரசு கூட்டியுள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் நாட்டின் பெயரான "இந்தியா" என்பதையே "பாரத்" அல்லது "பாரதம்" என மாற்ற மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதோ? என்ற சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. மத்திய பாஜக அரசின் இந்த சர்வாதிகாரப் போக்குக்கு திமுக, காங்கிரஸ் , இடதுசாரிகள் கடும் கண்டனமும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications