மத்திய பட்ஜெட் 2026: சென்னை - பெங்களூர், ஹைதராபாத் 'புல்லட்' ரயில்! தமிழகத்திற்கு ஜாக்பாட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1) நாடாளுமன்றத்தில் 2026-27-ஆம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்துள்ள அவர், இந்த முறை ரயில்வே மற்றும் உள்கட்டமைப்புத் துறையில் அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Union Budget 2026 27

இதுகுறித்து தமிழ் ரயில் தகவல் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ரயில்வே துறை அறிவிப்புகள் (Railway Highlights):

சென்னைக்கு டபுள் தமாகா: நாடு முழுவதும் மொத்தம் 7 வழித்தடங்களில் அதிவேக ரயில் (High-Speed Rail) சேவைகள் தொடங்கப்படும். இதில், சென்னை - பெங்களூர் மற்றும் சென்னை - ஹைதராபாத் ஆகிய இரண்டு முக்கிய வழித்தடங்களிலும் அதிவேக ரயில் பாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது தென் மாநிலப் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாகும்.

சரக்கு ரயில் பாதை: நாட்டின் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளை இணைக்கும் வகையில் பிரத்யேக சரக்கு ரயில் பாதை (Exclusive Freight Corridor) அமைக்கப்படும்.

உள்கட்டமைப்பு & நகர வளர்ச்சி:

ரூ.12.2 லட்சம் கோடி: மூலதனச் செலவு (Capital Expenditure) ரூ.12.20 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

நகரங்கள் மேம்பாடு: 2-ம் நிலை (Tier-2) மற்றும் 3-ம் நிலை (Tier-3) நகரங்களின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.5,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

நீர்வழித் தடம்: அடுத்த 5 ஆண்டுகளில் பொதுப் போக்குவரத்திற்காக நாடு முழுவதும் 20 புதிய நீர்வழித்தடங்கள் உருவாக்கப்படும். வாரணாசி மற்றும் பாட்னாவில் கப்பல் பழுது பார்க்கும் தளங்கள் அமைக்கப்படும்.

மருத்துவம் & தொழில்நுட்பம்:

பயோ பார்மா: ரூ.10,000 கோடியில் 'பயோ பார்மா சக்தி' திட்டம் செயல்படுத்தப்படும்.

நாள்பட்ட நோய்கள்: நீண்ட கால நோய்களைத் தடுக்கும் நடவடிக்கைகளுக்காக ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

எலக்ட்ரானிக்ஸ்: மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சிக்காக ரூ.40,000 கோடி பெருந்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

செமிகண்டக்டர்: மிகண்டக்டர் (Semiconductor) உற்பத்திக்குக் கூடுதல் ஊக்கம் அளிக்கப்படும்.

தொழில் துறை:

புதிய 'மெகா ஜவுளிப் பூங்கா' (Mega Textile Park) அமைக்கப்படும்.

சிறுகுறு தொழில்களை (MSME) ஊக்குவிக்க மும்முனைத் திட்டம் மற்றும் காதி கைவினைப் பொருட்களுக்காக 'மகாத்மா காந்தி கிராம ஸ்வராஜ் திட்டம்' அறிமுகப்படுத்தப்படும்.

வரும் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.8% முதல் 7.2% வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மக்கள் நலன், இளைஞர்கள் நலன் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவற்றை மையமாக வைத்து இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+