மத்திய பாஜக அரசின் "நிலக்கரி வேட்டை"க்கு ரூ.2,980 கோடி-மத்திய அமைச்சரவை ஒப்புதல்! தப்புமா தமிழ்நாடு?
டெல்லி: மத்திய அரசின் நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி கண்டறிதல் திட்டத்தை தொடர பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் ரூ.2,980 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படவும் மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பான மத்திய அரசின் அறிக்கை: நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி கண்டறிதல் தொடர்பான மத்திய திட்டத்தைத் தொடர பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 2021-22-ஆம் நிதியாண்டிலிருந்து 2025-26-ஆம் நிதியாண்டு வரை 15-வது நிதி ஆணையத்தின் திட்டப்படி ரூ.2,980 கோடி மதிப்பில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி தொடர்பான ஆய்வு இரண்டு விரிவான நிலைகளில் நடத்தப்படுகிறது: (i) பிராந்திய ஆய்வு ஊக்குவிப்பு மற்றும் (ii) கோல் இந்தியா நிறுவன எல்லைக்கு உட்படாத பகுதிகளில் விரிவான ஆய்வு ஆகியவையாகும்.
இந்தத் திட்டத்தின் ஒப்புதல் மூலம் பிராந்திய ஆய்வு ஊக்குவிப்புக்கு ரூ.1650 கோடியும், கோல் இந்தியா நிறுவன (சிஐஎல்) எல்லை அல்லாத பகுதிகளில் விரிவான ஆய்வுக்காக ரூ.1330 கோடியும் ஒதுக்கப்படும். உத்தேசமாக, 1300 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பிராந்திய ஆய்வின் கீழும், உத்தேசமாக 650 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் விரிவான ஆய்வுத் திட்டத்தின் கீழும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.
நாட்டில் நிலக்கரிச் சுரங்கங்களைத் தொடங்குவதற்கான விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க உதவும் வகையில், நிலக்கரி வளங்கள் தொடர்பான ஆதாரங்களை நிரூபிக்கவும் மதிப்பிடவும், நிலக்கரி மற்றும் பழுப்பு நிலக்கரி தொடர்பான ஆய்வு அவசியமானதாகும். இந்த ஆய்வின் மூலம் தயாரிக்கப்படும் புவியியல் அமைப்பு தொடர்பான அறிக்கைகள், புதிய நிலக்கரிச் சுரங்கத் தொகுதிகளை ஏலம் விட பயன்படுத்தப்பட்டு, அதன்பின் ஒதுக்கீடு பெறுபவர்களிடமிருந்து செலவு வசூலிக்கப்படும். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தப்புமா தமிழ்நாடு? : அண்மையில் தமிழ்நாட்டின் அரியலூர், தஞ்சாவூர், கடலூர் என காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்க அமைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. ஆனால் காவிரி டெல்டா, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்; இப்பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைத்தால் தமிழ்நாடு பாலைவனமாகும் என ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒருசேர எதிர்ப்பு குரல் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி கடந்த ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டுக்கு வருகை தருவதற்கு முன்னதாக, காவிரி டெல்டாவில் நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க மாட்டோம்; அத்திட்டம் கைவிடப்படும் என மத்திய அரசு அறிவித்தது. தற்போது நிலக்கரி, பழுப்பு நிலக்கரி திட்டத்தை கண்டறியும் திட்டத்தை தொடர மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்திருப்பது தமிழ்நாட்டு மக்களிடம் ஒருவித அச்சத்தை உருவாக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications