வேளாண்துறை முதலீட்டை அதிகரிக்க 'வேளாண் கட்டமைப்பு நிதியம்’ விரிவாக்கம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லி: நாட்டின் வேளாண் துறை உட்கட்டமைப்புக்கான மத்திய அரசின் வேளாண் கட்டமைப்பு நிதியத்தை விரிவாக்கம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. ஏற்கனவே வேளாண் கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கப்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் வேளாண் துறையில் 8.19 லட்சத்துக்கும் அதிகமான கிராமப்புற வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவின.
மத்திய அமைச்சரவை முடிவுகள் தொடர்பான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 'வேளாண் கட்டமைப்பு நிதியம்' என்ற திட்டத்தின் கீழ், மத்திய அரசுத் துறையின் நிதித் திட்டத்தை, மேலும் ஈர்ப்புடையதாகவும், தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றும் வகையில் விரிவுபடுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

நாட்டில் வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும், வேளாண் சமூகத்திற்கு ஆதரவளிப்பதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது. இந்த முயற்சிகள் தகுதியான திட்டங்களின் நோக்கத்தை விரிவுபடுத்துவதையும், வலுவான வேளாண் உள்கட்டமைப்பு சூழல் அமைப்பை வளர்ப்பதற்கான கூடுதல் ஆதரவு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.
சாத்தியமான வேளாண் சொத்துக்கள்: 'சமூக வேளாண் சொத்துக்களை உருவாக்குவதற்கான சாத்தியமான திட்டங்களின்' கீழ் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான திட்டத்தின் தகுதியான அனைத்து பயனாளிகளையும் அனுமதித்தல். இந்த நடவடிக்கை சமூக வேளாண் திறன்களை மேம்படுத்தும் சாத்தியமான திட்டங்களின் வளர்ச்சிக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் துறையில் உற்பத்தித்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது.
2020-ம் ஆண்டில் பிரதமரால் தொடங்கப்பட்டதிலிருந்து, 6623 கிடங்குகள், 688 குளிர்பதன கிடங்குகள் உருவாக்குவதில் வேளாண் கட்டமைப்பு நிதியம் 26 முக்கியப் பங்கு வகித்துள்ளது. இதன் விளைவாக நாட்டில் சுமார் 500 லட்சம் மெட்ரிக் டன் கூடுதல் சேமிப்பு திறன் உள்ளது. இதில் 465 எல்எம்டி உலர் சேமிப்பு மற்றும் 35 எல்எம்டி குளிர் சேமிப்பு திறன் ஆகியவை அடங்கும். இந்த கூடுதல் சேமிப்பு திறன் மூலம் ஆண்டுக்கு 18.6 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களையும், 3.44 லட்சம் மெட்ரிக் டன் தோட்டக்கலை விளைபொருட்களையும் சேமிக்க முடியும். இதுவரை 74,508 திட்டங்களுக்கு ரூ.47,575 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் வேளாண் துறையில் ரூ.78,596 கோடி முதலீட்டைத் திரட்டியுள்ளன. இதில் ரூ.78,433 கோடி தனியார் நிறுவனங்களிடமிருந்து திரட்டப்பட்டுள்ளது. மேலும், வேளாண் கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கப்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் வேளாண் துறையில் 8.19 லட்சத்துக்கும் அதிகமான கிராமப்புற வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவியுள்ளன.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications