Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வேளாண்துறை முதலீட்டை அதிகரிக்க 'வேளாண் கட்டமைப்பு நிதியம்’ விரிவாக்கம்- மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாட்டின் வேளாண் துறை உட்கட்டமைப்புக்கான மத்திய அரசின் வேளாண் கட்டமைப்பு நிதியத்தை விரிவாக்கம் செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. ஏற்கனவே வேளாண் கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கப்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் வேளாண் துறையில் 8.19 லட்சத்துக்கும் அதிகமான கிராமப்புற வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவின.

மத்திய அமைச்சரவை முடிவுகள் தொடர்பான செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 'வேளாண் கட்டமைப்பு நிதியம்' என்ற திட்டத்தின் கீழ், மத்திய அரசுத் துறையின் நிதித் திட்டத்தை, மேலும் ஈர்ப்புடையதாகவும், தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் மாற்றும் வகையில் விரிவுபடுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

cabinet narnedra modi

நாட்டில் வேளாண் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் வலுப்படுத்துவதற்கும், வேளாண் சமூகத்திற்கு ஆதரவளிப்பதற்கும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, வேளாண் உள்கட்டமைப்பு நிதி திட்டத்தின் நோக்கத்தை விரிவுபடுத்துவதற்கான தொடர்ச்சியான நடவடிக்கைகளை அரசு அறிவித்துள்ளது. இந்த முயற்சிகள் தகுதியான திட்டங்களின் நோக்கத்தை விரிவுபடுத்துவதையும், வலுவான வேளாண் உள்கட்டமைப்பு சூழல் அமைப்பை வளர்ப்பதற்கான கூடுதல் ஆதரவு நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

சாத்தியமான வேளாண் சொத்துக்கள்: 'சமூக வேளாண் சொத்துக்களை உருவாக்குவதற்கான சாத்தியமான திட்டங்களின்' கீழ் உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான திட்டத்தின் தகுதியான அனைத்து பயனாளிகளையும் அனுமதித்தல். இந்த நடவடிக்கை சமூக வேளாண் திறன்களை மேம்படுத்தும் சாத்தியமான திட்டங்களின் வளர்ச்சிக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இதன் மூலம் துறையில் உற்பத்தித்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துகிறது.

2020-ம் ஆண்டில் பிரதமரால் தொடங்கப்பட்டதிலிருந்து, 6623 கிடங்குகள், 688 குளிர்பதன கிடங்குகள் உருவாக்குவதில் வேளாண் கட்டமைப்பு நிதியம் 26 முக்கியப் பங்கு வகித்துள்ளது. இதன் விளைவாக நாட்டில் சுமார் 500 லட்சம் மெட்ரிக் டன் கூடுதல் சேமிப்பு திறன் உள்ளது. இதில் 465 எல்எம்டி உலர் சேமிப்பு மற்றும் 35 எல்எம்டி குளிர் சேமிப்பு திறன் ஆகியவை அடங்கும். இந்த கூடுதல் சேமிப்பு திறன் மூலம் ஆண்டுக்கு 18.6 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களையும், 3.44 லட்சம் மெட்ரிக் டன் தோட்டக்கலை விளைபொருட்களையும் சேமிக்க முடியும். இதுவரை 74,508 திட்டங்களுக்கு ரூ.47,575 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த அனுமதிக்கப்பட்ட திட்டங்கள் வேளாண் துறையில் ரூ.78,596 கோடி முதலீட்டைத் திரட்டியுள்ளன. இதில் ரூ.78,433 கோடி தனியார் நிறுவனங்களிடமிருந்து திரட்டப்பட்டுள்ளது. மேலும், வேளாண் கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கப்பட்ட உள்கட்டமைப்புத் திட்டங்கள் வேளாண் துறையில் 8.19 லட்சத்துக்கும் அதிகமான கிராமப்புற வேலை வாய்ப்புகளை உருவாக்க உதவியுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+