மத்திய அரசு பணிக்கு தேர்வு நடத்த தேசிய பணியாளர் ஏஜென்சி அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
டெல்லி: மத்திய அரசு பணிகளுக்கு தேர்வு நடத்துவதற்கான தேசிய பணியாளர் ஏஜென்சியை National Recruitment Agency- உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் விவரித்தார்.

இது தொடர்பாக ஜவடேகர் கூறுகையில், மத்திய அரசு பணிகளில் பி,சி பிரிவில் வேலைவாய்ப்பு, பொதுத்துறை வங்கிகளில் வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு தேசிய அளவில் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வுகளை நடத்த தேசிய பணியாளர் ஏஜென்சி National Recruitment Agency அமைக்கப்படும். இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது.
கரும்புக்கு கூடுதல் விலை வழங்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருக்கிறது. அத்துடன் ஜெய்ப்பூர், குவஹாத்தி, திருவனந்தபுரம் விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகை விடும் பரிந்துரைக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
கடந்த மே மாதமே அனைத்து விமான நிலையங்களையும் 3 மாதங்களுக்குள் தனியார் மயமாக்குவது என மத்திய அரசு முடிவு செய்திருந்தது. இந்த 3 மாத கால அவகாசம் என்பது ஆகஸ்ட் 15-ந் தேதியுடன் முடிவடைந்திருக்கிறது.
இந்த நிலையில் இணைய கருத்தரங்கு ஒன்றில் பேசிய மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி, விமான நிலையங்களை தனியார்மயமாக்குவது தொடர்பாக புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
Recommended Video
2030-ம் ஆண்டுக்குள் 100க்கும் மேற்பட்ட புதிய விமான நிலையங்கள் கட்டப்படும் என்றார். ஏற்கனவே நாட்டின் 12 விமான நிலையங்களை மத்திய அரசு தனியார்மயமாக்கி இருக்கிறது.
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications