பயோலாஜிக்கல் இ வேக்சின் உட்பட.. 74 கோடி வேக்சின் டோஸ்களுக்கு மத்திய அரசு ஆர்டர்.. விரைவில் டெலிவரி!
டெல்லி: பயோலாஜிக்கல் இ வேக்சின் உட்பட மொத்தம் 74 கோடி வேக்சின் டோஸ்களுக்கு மத்திய அரசு ஆர்டர் செய்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய அரசு தனது வேக்சின் கொள்கையை மாற்றி உள்ளது. பிரதமர் மோடி நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக வேக்சின் கொடுப்பதாகவும், இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை விநியோகிக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை வினியோக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும் என்று கூறியுள்ளார். இந்த நிலையில் நிதி ஆயோக் உறுப்பினரும், கொரோனா தடுப்பு வல்லுநர் குழுவின் தலைவருமான விகே பால் இது தொடர்பாக பேட்டி அளித்துள்ளார்.

முன்னுரிமை
இது தொடர்பாக பேட்டி அளித்த விகே பால், ஒன்றிய அரசுகள் மாநிலங்களுக்கு வேக்சின் அளிப்பதற்கு முன்பாகவே அது தொடர்பான விவரங்களை முன்கூட்டியே மாநில அரசுகளுக்கு தெரிவிக்கும். மாநில அரசுகள் தங்களுக்கு கிடைக்கும் வேக்சினை 18+ வயது கொண்டவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் கொடுக்கலாம். மாநில அரசு இதற்கான திட்டங்களை வகுத்துக்கொள்ளலாம்.

மாவட்டம்
மாநில அரசுகள் தங்களின் மாவட்ட நிர்வாகங்களுக்கு வேக்சின் வழங்குவது குறித்து முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். இதற்கான முறையான திட்டமிடலை செய்ய வேண்டும். இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மொத்த வேக்சின்களில் 25% தனியாருக்கு வழங்கப்படும். 13க்கும் அதிகமான மாநில அரசுகள் எங்களிடம் இந்த கோரிக்கையை வைத்தன.

வேக்சின்
மாநில அரசுகள் தனியார் மருத்துவமனைகளுக்கு சமமாக வேக்சின் கிடைப்பதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். பெரிய, சிறிய தனியார் மருத்துவமனைகளுக்கு வேக்சின் கிடைக்க வகை செய்ய வேண்டும். வேக்சின் உற்பத்தியாளர்கள் மூலம் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் வேக்சின் விலை முன்கூட்டியே முடிவு செய்யப்படும். காசு கொடுத்து வேக்சின் போட்டுக்கொள்ள நினைக்கும் மக்கள், தனியார் மருத்துவமனைகளில் போட்டுக்கொள்ளலாம் .

கோவிட்ஷீல்ட்
25 கோடி கோவிட்ஷீல்ட், 19 கோடி கோவாக்சின் மத்திய அரசு மூலம் ஆர்டர் செயயப்பட்டது. இதற்காக 30% முன்தொகை மத்திய அரசு மூலம் கொடுக்கப்பட்டது. இந்த 44 கோடி வேக்சின் டோஸ் வரும் டிசம்பர் 2021 வரை கிடைக்கும். பாரத் பயோடெக் மற்றும் சீரம் நிறுவனங்களுக்கு இதற்கான நேரடி ஆர்டர் கொடுக்கப்பட்டது.

பயோலாஜிக்கல் இ வேக்சின்
இது போக கூடுதலாக 30 கோடி டோஸ் பயோலாஜிக்கல் இ வேக்சின் மத்திய அரசு மூலம் ஏற்கனவே ஆர்டர் செய்யப்பட்டுவிட்டது. இந்த வேக்சின் விரைவில் வந்து சேரும். இந்த வேக்சின் வரும் செப்டம்பர் மாதம் கிடைக்கும். செப்டம்பர் மாதம் மாநிலங்களுக்கு இந்த வேக்சின் பிரித்து அளிக்கப்படும், என்று விகே பால் குறிப்பிட்டுள்ளார்.
-
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications