மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் விரைவில் கலைப்பு? மீண்டும் சமூக நீதி இலாகாவில் சேர்ப்பு?
டெல்லி: காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கட்சி ஆட்சியில் 2006-ல் உருவாக்கப்பட்ட மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் என்ற தனி அமைச்சகத்தை கலைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு முடிவு செய்துள்ளதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன.
2006-ம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இத்துறையின் முதலாவது அமைச்சராக இருந்தவர் ஏ.ஆர்.அந்துலே. அதன்பின்னர் சல்மான் குர்ஷித், ரஹ்மான்கான் ஆகியோரும் பாஜக ஆட்சியில் நஜ்மா ஹெப்துல்லா, முக்தர் அப்பாஸ் நக்வி ஆகியோரும் இருந்தனர். தற்போது மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூடுதல் பொறுப்பாக, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.

முஸ்லிம்கள், சீக்கியர், கிறிஸ்தவர், பவுத்தர், பார்சி மற்றும் ஜைனர்கள் நலனுக்காக இந்த சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டது. இந்த அமைச்சகத்தின் கீழ் பல்வேறு உதவித் தொகைகள், நலத்திட்டங்கள் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்துறையின் கீழ் வக்பு வாரியம், சிறுபான்மையினர் தேசிய ஆணையம் ஆகியவையும் செயல்படுகின்றன. மத்திய சமூக நீதித்துறை அமைச்சகத்தில் இருந்து பிரிக்கப்பட்டுதான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டது.
தற்போது மத்திய பாஜக அரசு இத்துறையை கலைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசானது சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைத்து இந்த துறையை உருவாக்கியது. சிறுபான்மையினர் நலனுக்காக தனி அமைச்சகம் வேண்டியது இல்லை; மீண்டும் சமூக நலத்துறையின் கீழ் அத்துறை செயல்படலாம் என்பது மத்திய அரசின் திட்டமாம்.
மத்திய அரசின் இத்திட்டத்துக்கு இப்போதே எதிர்ப்பு குரல்கள் வெளிப்பட்டு வருகின்றன. ஆனால் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சகம் செயல்படுத்தி வந்த உதவித் தொகைகள், நலத்திட்ட உதவிகள் அனைத்துமே தொடரவே செய்யும்; மத்திய அரசு அவற்றை ரத்து செய்யாது; நிர்வாக வசதிக்கான ஒரு நடைமுறையாகவே இந்த மாற்றம் இருக்கும் எனவும் மத்திய அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
-
ராதாபுரத்தில் தமிழிசை, மயிலாப்பூரில் அண்ணாமலை? பாஜக எடுக்கும் முடிவு.. கமலாலயத்தில் நடந்தது என்ன? -
"வேட்பாளர் இல்லை வெறும் பூத் ஏஜென்ட் தான்".. பாஜகவுக்கு அண்ணாமலை சொன்ன மெசேஜ்.. மேலிடத்துக்கு அடுத்த ஷாக் -
“பாஜகவுக்கு ஒரு தொகுதியை விட்டுக் கொடுத்துட்டேன்”.. கூலாக சொன்ன புதிய நீதிக்கட்சி தலைவர் AC சண்முகம் -
மாமியாருக்கு பதில் மருமகள்.. வாரிசு அரசியல் பேசிவிட்டு இப்படியா? மொடக்குறிச்சி பாஜக வேட்பாளரின் பின்னணி -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
குளச்சல் பிரின்ஸ், மயிலாடுதுறை ராஜ்குமார் உள்பட 5 காங். சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பு மறுப்பு! -
காங்கிரஸில் இணைந்த 6 நாளில் பென்னாகரத்தில் ஜி.கே.எம்.தமிழ்க் குமரன் போட்டி! தந்தையை எதிர்க்கிறாரா? -
இது தமிழ்நாடு ப்ரோ.. பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி! கை கொடுக்காத ஷாவின் ’அறுபடை வீடு’ பாலிடிக்ஸ் -
இன்னும் 2 நாட்கள்தான் இருக்கு! காங்கிரஸ், பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்வதில் ஏன் இழுபறி? -
காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்? வெளியானது உத்தேச பட்டியல்! இன்றிரவு அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
பாஜகவில் பஞ்சாயத்து.. காங்கிரஸில் கலகம்! என்ன தான் பிரச்சனை! எப்போது வரும் வேட்பாளர் பட்டியல்?











Click it and Unblock the Notifications