"எங்களை ரஷ்ய கச்சா எண்ணெய்யை வாங்க சொன்னதே அமெரிக்கா தான்.." ரகசியத்தை உடைத்த இந்தியா! என்ன நடந்தது

Subscribe to Oneindia Tamil

மாஸ்கோ: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் நிலையில், இதை உலக நாடுகள் விமர்சித்து வருகின்றன. இதற்கிடையே ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை முதலில் வாங்கச் சொல்லியதே அமெரிக்கா தான் என்றும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வைத் தடுக்கவே ரஷ்யக் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குவதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி நகருக்குப் பயணம் செய்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அங்கு நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றினார். அப்போது ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்கு மிகக் காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளின் இரட்டை வேடத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

US Asked India to Buy Russian Oil Crude oil India

ஜெய்சங்கர்

2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த பிறகு, ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஆனால், இப்போது ஜெய்சங்கர் ஒரு முக்கியமான உண்மையை உடைத்துள்ளார். அதாவது உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துவிடக் கூடாது என்பதற்காக, ரஷ்ய எண்ணெய்யைத் தொடர்ந்து வாங்குமாறு அமெரிக்காவே இந்தியாவைக் கேட்டுக்கொண்டது என்று அவர் கூறியுள்ளார். "உலக எண்ணெய் சந்தையை நிலைப்படுத்தவே ரஷ்யாவிடம் இந்தியா எண்ணெய் வாங்கியது" என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

என்ன நடந்தது

இந்தியாவுக்கு வழக்கமாக எண்ணெய் வழங்கும் நாடுகள் மத்திய கிழக்கு நாடுகள் ஆகும். ஆனால் உக்ரைன் போர் தொடங்கியவுடன், ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எண்ணெய்யைப் புறக்கணித்துவிட்டு, மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய்யை மொத்தமாக வாங்கத் தொடங்கின. இதனால் இந்தியாவுக்குக் கிடைக்க வேண்டிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது. அவர் மேலும் கூறுகையில், "நாங்கள் வழக்கமாக வாங்கும் நாடுகளிடம் இருந்து ஐரோப்பிய நாடுகள் தங்கள் கச்சா எண்ணெய்யைப் பெறத் தொடங்கின. இதனால் வேறு வழியின்றி நாங்கள் ரஷ்யாவிடம் செல்ல வேண்டிய சூழல் உருவானது" என்று ஜெய்சங்கர் விளக்கியுள்ளார்.

குளறுபடிகள்

அமெரிக்காவின் கொள்கைகளில் உள்ள குளறுபடிகளை ஜெய்சங்கர் கடுமையாக விமர்சித்துள்ளார்.. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கியதற்காக டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் இந்தியா மீது 50% வரை வரி விதித்தது. பின்னர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இது 18% ஆகவும், பிறகு 10% ஆகவும் குறைக்கப்பட்டது. தற்போது மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுவதால், எண்ணெய் விலை உயரக்கூடாது என்பதற்காக அமெரிக்காவே ரஷ்ய எண்ணெய் மீதான தடைகளைத் தளர்த்தியுள்ளது.

ஜெய்சங்கர் இது தொடர்பாக "இதில் எந்தப் பெரிய கொள்கையும் இல்லை. முதலில் வரி விதிப்பது, பிறகு விலக்கு அளிப்பது என அமெரிக்கா நடந்துகொள்கிறது. எனவே, இதில் யாரும் அட்வைஸ் செய்யத் தேவையில்லை" என்று சாடியுள்ளார்.

கேள்வி

இந்தியா ரஷ்யாவுக்கு ஆதரவாக இருப்பதாகக் குற்றம் சாட்டிய ஐரோப்பிய நாடுகளுக்கு ஜெய்சங்கர் ஒரு அதிரடி கேள்வியை முன்வைத்தார். அதாவது அவர், "இந்திய ஆயுதங்களால் இதுவரை எந்த ஐரோப்பிய நாடும் தாக்கப்பட்டதில்லை. ஆனால், ஐரோப்பா விற்கும் ஆயுதங்கள் பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகின்றன" என்றார். இந்தியா ஐரோப்பாவின் பாதுகாப்பிற்கு ஒருபோதும் அச்சுறுத்தலாக இருந்ததில்லை, ஆனால் ஐரோப்பாவின் ஆயுத விற்பனை இந்தியாவுக்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவின் நலன்

அமெரிக்கா விலக்கு அளித்தாலும் அளிக்காவிட்டாலும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் லாபத்தின் அடிப்படையிலேயே எண்ணெய் கொள்முதல் அமையும் என்று இந்தியா தெளிவுபடுத்தியுள்ளது. பெட்ரோலிய அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா இது குறித்துக் கூறுகையில், "அமெரிக்காவின் விலக்குக்கு முன்பும் நாங்கள் ரஷ்யாவிடம் வாங்கினோம், இப்போதும் வாங்குகிறோம், இனியும் வாங்குவோம்" என்று தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+