உத்தரப்பிரதேசம்... பாஜக முன்னாள் தலைவர் சுட்டுக் கொலை... ரத்த வெள்ளத்தில் உடல் மீட்பு!!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலை நடைபயிற்சி சென்று கொண்டு இருந்த பாஜக தலைவர் சுட்டு கொல்லப்பட்டார். மாவட்ட பாஜக தலைவராக இருந்தவர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாக்பட் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பாஜக முன்னாள் மாவட்ட தலைவர் சஞ்சய் கோகர். இவர் தனது வயல் காட்டில் இன்று காலை நடைபயிற்சி சென்று இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மூவர் சஞ்சயை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் அவர் அதே இடத்தில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.

Uttar Pradesh BJP: Former district president Sanjay Khokhar gunned down today

இந்த சம்பவம் பாக்பட்டில் இருக்கும் சப்ரவ்ளி என்ற இடத்தில் நடந்தது. காலலயில் அந்த வழியே சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த சஞ்சய் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் காஷ்மீரில் புத்காம் என்ற இடத்தில் பாஜக தலைவர் ஓபிசி மோர்ச்சா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டு இருந்தார். ஆகஸ்ட் 8ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் இருக்கும் குல்காம் என்ற இடத்தில் பாஜக பஞ்சாயத்து தலைவர் அஹ்மத் காண்டே தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டு இருந்தார். தொடர்ந்து ஆங்காங்கே பாஜக தலைவர்கள் சுட்டுக் கொல்லப்படுவது பாஜக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+