இரு தவணை டோஸில் உ.பி. முதலிடம்.. ஒரு தவணை டோஸில் உத்தரகண்ட்.. இந்தியா சாதனை
டெல்லி: மக்கள்தொகை அதிகம் உள்ள மாநிலங்களில் முதல் தவணை தடுப்பூசியை அதிகம் போட்டு உத்தரகாண்ட் மாநிலம் சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில் 5.39 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவில் இரு தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.

முதல் அலையில் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் முனைப்பு காட்டப்பட்டது. இரண்டாவது அலையில் 18 முதல் 44 வயதுக்குள்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்துக் கொடுக்கிறது.
இந்த நிலையில் ஜனவரி 16ஆம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் நேற்று முன் தினம் வரை 98.67 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்றைய தினம் 99 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்றைய தினம் 44.63 லட்சம் டோஸ்கள் போடப்பட்டதை அடுத்து 100 கோடி பேருக்கு தடுப்பூசி என்ற இலக்கை இந்தியா எட்டிவிட்டது. 275 நாட்கள் கடந்துள்ள நிலையில் புதிய சாதனை படைத்துள்ளது. இதில் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களும் அதிக அளவில் தடுப்பூசிகளை செலுத்தியவைகளில் முன்னணி இடம் வகிக்கிறது.
உத்தரப்பிரதேசத்தில் 12.21 கோடி டோஸ்களும் மகாராஷ்டிராவில் 9.32 கோடி டோஸ்களும் , மேற்கு வங்கத்தில் 6.85 கோடி டோஸ்களும் குஜராத்தில் 6.76 கோடி டோஸ்களும் பீகாரில் 6.35 கோடி டோஸ்களும் கர்நாடகாவில் 6.17 கோடியும், ராஜஸ்தானில் 6.10 கோடி டோஸ்களும், தமிழகத்தில் 5.39 கோடி டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன.
மக்கள்தொகை அதிகம் உள்ள மாநிலங்களில் முதல் தவணை தடுப்பூசியை அதிகம் போட்டு உத்தரகாண்ட் மாநிலம் சாதனை படைத்துள்ளது. இதுவரை இந்தியாவில் 29.17 கோடி பேர் இரு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டனர். அவர்கள் 41.22 சதவீதம் பேராவர்.
இந்த 100 கோடி டோஸ் சாதனையை இந்தியா கொண்டாடி வருகிறது. மிக நீளமான 1400 கிலோ எடையுள்ள கொண்டமூவர்ணக் கொடி டெல்லி செங்கோட்டையில் ஏற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாடகர் கைலாஷ் கெர் இயற்றிய பாடலை மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மண்டாவியா வெளியிடுகிறார்.
-
பெட்ரோல் விலை 100க்கு கீழ் வருமா? மத்திய அரசின் வரி குறைப்பால் இந்தியாவில் என்ன நடக்க போகிறது? -
அமெரிக்க தாக்குதலில் இந்திய மாலுமிகள் மாயம்.. துணை தூதரை அழைத்து கண்டித்த மத்திய அரசு! -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
அதானி நிறுவனத்தின் அசுர வளர்ச்சி! சோலார் பேனல் உற்பத்தியில்.. புதிய உச்சம்! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 8வது ஊதியக்குழு வந்தால்.. பண மழை! எவ்வளவு கிடைக்கும்னு பாருங்க -
அந்த 3 கேள்விகள்! பதில் சொல்ல கூட முடியாமல் திணறல்! Starlink சேவையை இந்தியாவில் தொடங்குவதில் சிக்கல் -
இந்தியாவை கபளீகரம் செய்த சரிவு.. நிலைமை ரொம்ப மோசம்.. இது தொடர்ந்தால் டேஞ்சர் தான்! -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா












Click it and Unblock the Notifications