Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னா ஸ்பீட்! கண்ணிமைக்கும் நேரத்தில் 180 கி.மீ வேகத்தில் வந்தே பாரத் ரயில்! சொட்டு நீர் கூட சிந்தல

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட வந்தே பாரத் ரயில் வேகத்தில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

Recommended Video

    என்ன ஸ்பீட்.. கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்த வந்தே பாரத் ரயில்! வேகத்தில் புதிய உச்சம்

    இந்தியாவில் மிக முக்கிய போக்குவரத்து முறையாக ரயில்கள் உள்ளன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவில் ரயில் சேவை மிகவும் விரிவானதாக இருக்கிறது.

    மேலும், விமான கட்டணத்துடன் ஒப்பிடுகையில் அதில் ஒரு பங்கு பணத்தில் நாம் எங்கு வேண்டுமானாலும் சென்று வந்துவிடலாம். இதனால் நாட்டில் பலரும் ரயில் போக்குவரத்தையே தேர்ந்தெடுப்பார்கள்.

     ரயில்கள்

    ரயில்கள்

    ஆனால், இந்தியன் ரயில்கள் பல ஆண்டுகளாக எந்தவொரு அப்டேட்டையும் பார்க்கவில்லை. மிகக் குறைந்த தொகைக்குச் சேவையை அளிப்பதால் இந்திய ரயில்வே நஷ்டத்திலேயே இயங்கி வருகிறது. இதனால் ஐரோப்பிய நாடுகளைப் போல அதிவேக ரயில்களில் இந்தியாவால் பெரியளவில் முதலீடுகளைச் செய்ய முடியவில்லை என்ற நிலையே தொடர்ந்தது. இந்த நிலையை மாற்ற ரயில்வே துறை சில ஆண்டுகளாக முயன்று வருகிறது.

     வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

    வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

    இதற்காக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். இந்த ரயில்களை இந்தியன் ரயில்வே தொடர்ச்சியாகச் சோதனைக்கு உட்படுத்தி வருகிறது. அதன்படி சமீபத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் 180 கிமீ வேகத்தில் சென்று சாதனை படைத்துள்ளது.

     அஷ்வனி வைஷ்ணவ்

    அஷ்வனி வைஷ்ணவ்

    இது தொடர்பான வீடியோவை தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ள மத்திய அமைச்சர் அஷ்வனி வைஷ்ணவ், வந்தேபாரத்-2 சோதனை ஓட்டத்தில் 180 கிமீ வேகத்தில் சென்றதாகப் பதிவிட்டுள்ளார். கோட்டா-நாக்டா பகுதிகளுக்கு இடையே இந்த வேகச் சோதனை நடத்தப்பட்டது. முதலில் 120 கிமீ வேகத்தில் செல்ல தொடங்கிய ரயில்களின் வேகம் மெல்ல 130,140 என உயர்த்தப்பட்டு 180 கிமீ வேகம் வரை அடைந்தது.

     சோதனை

    சோதனை

    RDSO எனப்படும் ஆராய்ச்சி, வடிவமைப்பு மற்றும் தரநிலைகள் அமைப்பு மணிக்கு 180 கிமீ வேகத்தில் செல்வதைத் தாங்கும் வகையில் ரயில் பெட்டிகளை உருவாக்கி உள்ளன. மொத்தம் 16 ரயில் பெட்டிகளை இந்த சோதனையில் பயன்படுத்தப்பட்டு உள்ளன. கோட்டா பிரிவில் பல்வேறு கட்ட சோதனைகள் நடத்தப்பட்டன. கோட்டா முதல் ராம்கஞ்ச் மண்டி வரையிலான பகுதிகளில் இந்த விரிவான சோதனை மேற்கொள்ளப்பட்டது.

     சொட்டு நீர் கூட சிந்தவில்லை

    சொட்டு நீர் கூட சிந்தவில்லை

    அப்போது தான் இது 180 கிமீ வேகத்தை எட்டியுள்ளது. அதுவும் ஒரு இடத்தில் இல்லை பல இடங்களில் இந்த ரயில் மணிக்கு 180 கிமீ வேகத்தைத் தொட்டது. குறிப்பாக 180 கிலோமீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கினாலும் கூட உள்ளே டம்ளரில் இருக்கும் நீரில் ஒரு சொட்டு கூட சிந்தவில்லை. தற்போதுள்ள ரயிலில் உட்கார்ந்து செல்வதே சிரமம். அந்த அளவுக்கு ஆடிக்கொண்டே தான் ரயில்கள் செல்லும். ஆனால் இந்த புதிய வந்தே பாரத் ரயில் சொட்டு நீர் கூட சிந்தாத வகையில் ஸ்டெடியாக செல்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. முற்றிலுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த வந்தே பாரத் ரயில் என்பது இந்திய ரயில்வே துறையின் பெரிய சாதனையாகவே கருதப்படுகிறது.

     வந்தே பாரத் வசதிகள்

    வந்தே பாரத் வசதிகள்

    semi-high-speed train வகையைச் சேர்ந்த இந்த அதிவேக ரயில் self-propelled என்ஜினை கொண்டது. மேலும், தானியங்கி கதவுகள், முற்றிலுமாக ஏசி பெட்டிகள், 180 டிகிரி வரை சுழலும் நாற்காலி கொண்டதாகும். இந்த அளவுக்கு வேகத்தில் செல்ல அதற்கேற்ப பெரிய திருப்பங்கள் இல்லாத ரயில் பாதைகளும் தேவை. நமது நாட்டில் இந்த ரயில்கள் கொண்டு வரப்பட்டால் அது பயண நேரத்தைப் பெருமளவு குறைக்கும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+