டெல்லியில் மீண்டும் வெடித்தது விவசாயிகள் போராட்டம்! மோடி அரசை விமர்சித்த துணை ஜனாதிபதி
டெல்லி: வேளாண் பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தலைநகர் டெல்லியில் மீண்டும் விவசாயிகள் போராட்டம் வெடித்துள்ளது. இதனையடுத்து போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் ஏன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தவில்லை என துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் கேள்வி எழுப்பியிருக்கிறார். அத்துடன் விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக 5 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளதாக உ.பி. பாஜக அரசும் அறிவித்துள்ளது. மேலும் விவசாயிகள் போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளன.
மத்திய பாஜக அரசின் 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த 2020-ம் ஆண்டு விவசாயிகள் டெல்லி எல்லைகளில் முகாமிட்டு போராட்டம் நடத்தினர். கடும் குளிர், கொட்டும் பனி, வெயில் இடையே ஓராண்டு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் 700க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். இறுதியாக மத்திய பாஜக அரசு தமது 3 வேளாண் சட்டங்களை கைவிடுவதாக அறிவித்தது. பிரதமர் நரேந்திர மோடியும் விவசாயிகளிடம் மன்னிப்பு கோரினார்.

இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் போது வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான சட்டம் கொண்டுவரப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகளை மத்திய பாஜக அரசு அப்போது வழங்கியது. ஆனால் இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் விவசாயிகள் மீண்டும் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதனால் டெல்லியில் பரபரப்பு நிலவுகிறது.
இதனிடையே போராடும் விவசாயிகளுடன் மத்திய அரசு உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் வலியுறுத்தி உள்ளார். மேலும் உத்தரப்பிரதேச மாநில அரசும் 5 வல்லுநர்கள் அடங்கிய குழு ஒன்றையும் அமைத்து விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்துள்ளது. அத்துடன் நாடாளுமன்றத்திலும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளன.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications