பதவியை தூக்கி எறிந்த ராகுல் காந்தி.. மக்களோடு மக்களாக சேர்ந்து சினிமா பார்த்து கலக்கல்!
மக்களுடன் சேர்ந்து டில்லி தியேட்டரில் படம் பார்த்தார் ராகுல் காந்தி
Recommended Video
டெல்லி: பதவியை தூக்கி எறிந்த ராகுல்காந்தி, அன்னைக்கு ராத்திரியே சினிமா பார்க்க போய் விட்டார். பொதுமக்களுடன் சேர்ந்து ராகுல் காந்தி சினிமா பார்க்கும் வீடியோதான் தற்போது வைரலாகி வருகிறது.
அரசியல் தோல்வியில் துவண்டு வந்தார் ராகுல்காந்தி, இவ்வளவு காலம் எத்தனையோ பேர் சமாதானம் செய்தும் ராகுலை தேற்ற முடியவில்லை.
2 நாளைக்கு முன்னாடி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். 4 பக்கத்துக்கு இந்த ராஜினாமா கடிதத்தை அவர் எழுதியிருந்தார். ட்விட்டரிலும் பதிவிட்டுவிட்டு வெளியேறிவிட்டார். இதற்கு பிரியங்காவும், ஒரு சிலருக்குதான் இப்படி ராகுல் போல துணிச்சல் இருக்கும் என்று சொல்லி இருந்தார்.
அன்றைய தினம், நாடு முழுவதும் இருந்து பல காங்கிரஸ் தொண்டர்கள் "தலைவா.. எங்களுக்கு நீங்கள்தான் தலைவராக தொடர வேண்டும்" என்று கோரிக்கை எழுப்பினர், ஒரு சிலர் தற்கொலை முயற்சியில் கூட ஈடுபட ஆரம்பித்தனர்.
ஆனால், ராகுல்காந்தி தனது முடிவில் தெளிவாக உறுதியாக இருந்தார். பதவியை ராஜினாமா செய்த அன்று இரவு டில்லியில் ஒரு சினிமாவுக்கு போயிருக்கிறார். பிவிஆர் சாணக்கியா மல்டிப்ளக்ஸ் என்ற தியேட்டரில் ஆர்ட்டிக்கிள் 15 என்ற படத்தை பார்த்து ரசித்தார்.
16 வயசு பெண்ணை நாசம் செய்த 6 பேர்.. மீண்டும் அதிர வைத்த பொள்ளாச்சி!
அந்த தியேட்டர் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. எதை பற்றியும் கவலைப்படாத ராகுல், ரசிகர்களுடன் ரசிகராய் படத்தை பார்க்கும் வீடியோதான் வைரலாகி வருகிறது. பக்கத்தில் இருந்த நண்பர்களுடன் பேசிக்கொண்டே பாப்கார்ன் சாப்பிடுகிறார். இவ்ளோ பெரிய அரசியல்வாதி, பெரிய வீட்டு பிள்ளை மக்களுடன் சேர்ந்து சினிமா பார்ப்பதை ஏராளமானோர் புகழ்ந்து வருகிறார்கள். உண்மைதான்.. கர்வம், தலைக்கணம் என்பது நேரு குடும்பத்தில் யாருக்குமே எப்பவுமே இருந்தது கிடையாது.