நான் ராஜபுத்திரன்..மணீஷ் சிசோடியா ட்வீட்டுக்கு காஷ்மீர் பைல்ஸ் இயக்குநர் விவேக் அக்னிகோத்ரி கண்டனம்
டெல்லி: நான் ஒரு ராஜபுத்திரன்; என் தலையை நானே வெட்டிக் கொள்வேனே தவிர ஒருபோதும் தலைவணங்க மாட்டேன் என பாஜகவுக்கு ஆம் ஆத்மி மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா எச்சரிக்கை விடுத்தது சர்ச்சையாகி உள்ளது.
Recommended Video
டெல்லி துணை முதல்வர் மணீ சிசோடியா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. டெல்லி யூனியன் பிரதேச மதுபான கொள்கையில் ஊழல் நடந்துள்ளதாக கூறி இவ்வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஏற்னவே மணீஷ் சிசோடியாவின் வீடு உள்ளிட்ட இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி இருந்தனர். இந்த வழக்கில் மணீஷ் சிசோடியாவை கைது செய்யக் கூடிய சாத்தியங்கள் இருக்கிறது என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியிருந்தார். மேலும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் மணீஷ் சிசோடியாவுக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் மணீஷ் சிசோடியா தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாவது: நான் ஒரு ராஜபுத்திரன்; மகாராஜா ராணா பிரதாப்சிங் வம்சத்தைச் சேர்ந்தவர். நானே என் தலையை வெட்டிக் கொள்வேனே தவிர ஒரு போதும் தலைவணங்கி நிற்க (பாஜக முன்பாக) மாட்டேன் என கூறியிருந்தார். அதாவது ஆம் ஆத்மி கட்சியை இரண்டாக உடைத்து பாஜகவில் இணைந்துவிட்டால் தம் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என பாஜகவினர் பேரம் பேசுவதாக மணீஷ் சிசோடியா குற்றம் சாட்டி இருந்தார்.
குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு ஆம் ஆத்மி கட்சி கடும் சவாலாக இருந்து வருகிறது; அதனால்தான் ஆம் ஆத்மியை குறிவைத்து பாஜக நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது அக்கட்சித் தலைவர்களின் பொதுவான குற்றச்சாட்டு.
தற்போது மணீஷ் சிசோடியாவின் இந்த ட்விட்டர் பதிவும் சர்ச்சையாகிவிட்டது. நான் ஒரு ராஜபுத்திரன் என குறிப்பிட்டு அவர் பதிவிட்டிருப்பது ஜாதிய மனோபாவத்தின் வெளிப்பாடு என காஷ்மீர் பைல்ஸ் பட இயக்குநரும் பாஜக ஆதரவாளருமான விவேக் அக்னிகோத்ரி கொந்தளித்துள்ளார்.
இது தொடர்பாக விவேக் அக்னிகோத்ரி ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது: இது என்ன ஜாதியவாதம்? ஒருவேளை ராஜபுத்திரனாக இல்லாமல் இருந்தால் தலைகுனிந்து நிற்பாரா? டெல்லியில் இருக்கும் பிராமணர்கள், யாதவர்கள், குஜ்ஜார்கள், ஜாட்கள், சீக்கியர்கள் என அனைவரும் தலைகுனிவார்களா? முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தலித்துகள் பற்றி என்ன நினைக்கிறார்? இவ்வாறு அக்னி கோத்ரி கூறினார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications