'நரகத்தில் வாழ்கிறோம், உதவ முடியவில்லை..' கருப்பு பூஞ்சை மருந்து தட்டுப்பாடு.. டெல்லி ஐகோர்ட் வேதனை
டெல்லி: கருப்பு பூஞ்சை நோய்க்கு அளிக்கப்படும் மருந்து தட்டுப்பாடு குறித்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள், நாம் தற்போது நரகத்தில் வாழ்கிறோம் என்றும் மருந்து இறக்குமதி செய்யத் தேவையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர்.
இந்தியாவில் தற்போது தான் கொரோனா பரவலின் 2ஆம் அலை மெல்லக் குறைந்து வருகிறது. ஆனால், அதேநேரம் கொரோனாவுக்கு பின் ஏற்படும் பாதிப்புகளும் அதிகரித்துள்ளது.
குறிப்பாக நாட்டில் கருப்பு பூஞ்சை பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு அதிகளவில் ஸ்டீராய்டுகள் அளிக்கப்படுவதால், அவர்களில் உடல் பலவீனமாவதாகவும், இதனால் அவர்களில் எளிதில் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மருந்திற்குத் தட்டுப்பாடு
இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட டெல்லியைச் சேர்ந்த இரு நோயாளிகளுக்கு மருந்து கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் ஆஜரான வழக்கறிஞர் ராகேஷ் மல்ஹோத்ரா, கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் Liposomal Amphotericin-B மருந்திற்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். அப்போது வெளிநாடுகளிலிருந்து 2.3 லட்சம் கருப்பு பூஞ்சை மருந்துகளை இறக்குமதி செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.

எப்போது வரும்
2.3 லட்சம் கருப்பு பூஞ்சை மருந்துகள் மட்டும் போதும் என மத்திய அரசு எப்படி முடிவு செய்தது, அவை தற்போது எங்கு உள்ளது, எந்த நிலையில் உள்ளது, அவை எப்போது இந்தியாவுக்கு வரும், முதலில் இந்த மருந்துகளுக்கு மத்திய அரசு ஆர்டர் அளித்துவிட்டதா என அடுக்கடுக்கான கேள்விகளை டெல்லி உயர் நீதிமன்றம் எழுப்பியது. அப்போது மருந்திற்கு ஏற்கனவே ஆர்டர் அளிக்கப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தெரிவித்தது. கடந்த மே 24ஆம் தேதிஆர்டர் அளிக்கப்பட்டிருந்தால், இந்நேரம் மருந்துகள் வந்திருக்கும் என்றும் நாமக்கு குறுகிய காலம் உள்ளதால் விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நரகத்தில் வாழ்கிறோம்
மேலும் நீதிபதிகள் கூறுகையில், "நாம் இப்போது நரகத்தில் வாழ்கிறோம். நாம் அனைவருமே இந்த நரகத்தில்தான் இப்போது வாழ்கிறோம். தற்போது நாட்டில் இருக்கும் சூழ்நிலையில் நாங்கள் உதவ விரும்புகிறோம். ஆனால், நாங்கள் உதவ முடியாத நிலையில் உள்ளோம். இந்த நோய் ஒவ்வொரு மணி நேரமும் அதிகரித்து வருகிறது. நாம் வேகமாகச் செயல்பட வேண்டும். மருந்துகளின் இறக்குமதி குறித்த விரிவான அறிக்கையை வரும் திங்கள்கிழமை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

எத்தனை பேருக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பு
முன்னதாக நீதிமன்றத்தில் Amphotericin B மருந்து தேவை எப்படிக் கணக்கிடப்பட்டது என்பதை மத்திய அரசு விளக்கியது. அதாவது கொரோனாவால் பாதிக்கப்படும் நோயாளிகளில் 20% பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி சூழ்நிலை ஏற்படுகிறது. அப்படி மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் 1:500 அல்லது 1:1000 பேருக்குக் கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.
-
போலீஸே உடலை அடக்கம் பண்ணிடும்! ஆகாஷ் வழக்கில் நீதிமன்றம் எச்சரிக்கை! விடாப்பிடியாய் பெற்றோர்! பரபர -
100 நாள் ஆச்சு.. இன்று மாலைக்குள் ஆகாஷ் உடலை வாங்குங்க.. பெற்றோருக்கு கெடு விதித்த ஐகோர்ட்! -
விவாகரத்து வழக்குகளில் பெயர்களை வெளியிடக் கூடாது - உயர்நீதிமன்ற கிளை போட்ட உத்தரவு! - -
3 மாதங்களாக மார்ச்சுவரியில் ஆகாஷ் உடல்..நீதிமன்ற உத்தரவால் 102வது நாளில் தகனம்! உறவினர்கள் அஞ்சலி -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications