பெட்ரோல்-டீசல் தட்டுப்பாடு வருமா? போர் பதற்றத்துக்கு நடுவே இந்தியன் ஆயில் குட்நியூஸ்
டெல்லி: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் என்பது அதிகரித்துள்ளது. பலரும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு வரும் என்று பெட்ரோல் நிலையங்களில் குவிந்து வரும் நிலையில் மக்களே பயப்பட வேண்டாம். போதுமான அளவுக்கு எரிபொருட்கள் கையிருப்பில் உள்ளது என்று இந்தியன் ஆயில் விளக்கம் அளித்துள்ளது.
நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் பாகிஸ்தானில் ஏவுகணை வீசி 9 பயங்கரவாத முகாம்களை நம் நாடு அழித்தது. இதற்கு நேற்று முதல் பாகிஸ்தான் நம் நாட்டின் மீது ட்ரோன், ஏவுகணை, போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களை நம் முப்படைகள் முறியடித்து பாகிஸ்தானின் மூக்கை உடைத்துள்ளன.

ஆனால் பாகிஸ்தான் அடங்கவில்லை. இதனால் அதிரடியாக பாகிஸ்தான் மீது நேற்று இரவு நம் நாடு தாக்குதல் நடத்தியது. இப்போது நம் நாட்டுக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இதனால் இருநாடுகளின் எல்லைகளில் தொடர்ந்து பதற்றம் என்பது ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே தான் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள பஞ்சாப் மாநில கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் போர் பதற்றம் தொடர்ந்து அதிகரிப்பதால் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்ச உணர்வில் ஏராளமான மக்கள் பெட்ரோல் நிலையங்களில் குவிந்து அதிகளவில் பெட்ரோல், டீசலை வாங்கி வரும் போட்டோக்கள், வீடியோக்கள் வெளியாகின.
இந்நிலையில் தான் மக்கள் யாரும் பயப்பட வேண்டாம். நம் நாட்டுக்கு தேவையான பெட்ரோல், டீசல் கையிருப்பில் உள்ளது என்று இந்தியன் ஆயில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் சார்பில் எக்ஸ் பக்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுவதும் போதுமான அளவுக்கு எரிபொருள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் எங்களின் சேவைகள் வழக்கம்போல் எந்த பாதிப்பும் இன்றி வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.
எங்களின் அனைத்து விற்பனை நிலையங்களிலும் பெட்ரோல், டீசல், எல்பிஜி உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தேவையின்றி கூட்டம் கூடாமல் சிறப்பான சேவைகளை வழங்க எங்களுக்கு உதவி செய்ய வேண்டும். இந்த செயல் என்பது தடையின்றி எரிபொருள் விநியோகத்தை எங்களால் உங்களுக்கு வழங்க உதவும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மத்தியஸ்தம் என பந்தா காட்டிய பாகிஸ்தான்.. அடிக்க வேண்டிய இடத்தில் அடித்த ஈரான்.. ஷெபாஸ் ஷெரீப் ஷாக் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அது வேற வாய்.. இது வேற வாய்! பாகிஸ்தானை அசிங்கப்படுத்திய ஈரான்! அடுத்த நாளே திடீர் ட்விஸ்ட்! என்ன? -
அசிங்கப்பட்ட பாகிஸ்தான்! முகத்திலேயே விழுந்த அடி.. கப்பலை கூட அனுமதிக்காத ஈரான்! இதெல்லாம் தேவை தானா -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
எல்லாம் நாடக மேடைதான்.. போர் நிறுத்தத்திற்கு நோ சொன்ன ஈரான்.. கோடிகளில் லாபம் பார்த்த ஜாம்பவான்கள் -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் முடிவு என்ன? டிரம்பின் மருமகன் பயணம் ஏன் முக்கியமானது?












Click it and Unblock the Notifications