6 லட்சம் வீரர்களே இருக்காங்க.. பாகிஸ்தானால் இந்தியா முன் நிற்க முடியாது.. புலம்பிய பாக். அதிகாரி
டெல்லி: இந்தியா போன்ற வலிமை வாய்ந்த ராணுவம் முன்பாக 6 லட்சம் வீரர்களை மட்டுமே கொண்ட பாகிஸ்தானால் நிற்க முடியாது என்று பாகிஸ்தானின் முன்னாள் ஏர் மார்ஷ் மசூத் அக்தர் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அமெரிக்காவின் தலையீடு இல்லாமல் பதற்றத்தை குறைக்க முடியாது என்று கூறிய அவர், இந்தியா அடுத்ததாக 4 பெரிய தாக்குதலுக்கு திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்தியா - பாகிஸ்தான் இடையில் 4வது நாளாக மோதல் ஏற்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 10 பேரும், அவருடன் நெருங்கிய நட்பில் இருந்த 4 பேரும் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. அதனை இந்தியா வான் பாதுகாப்பு அமைப்பு தொடர்பாக எளிதாக முறியடித்துள்ளது. இதனிடையே நேற்றிரவு நடைபெற்ற தாக்குதலில், பாகிஸ்தானின் 3 ராணுவ தளங்கள் மீது இந்தியா மிகப்பெரிய அட்டாக்கை நடத்தி இருக்கிறது.
லாகூர், இஸ்லாமாபாத், ராவல்பிண்டி நகரங்களில் உள்ள நுர்கான், முரித் மற்றும் ரபிக் ஆகிய விமான தளங்களை இந்திய ராணுவம் ஏவுகணைகள் மூலம் தாக்கி இருக்கிறது. இதனை பாகிஸ்தான் செய்தி தொடர்பாளரும் உறுதி செய்திருக்கிறார். இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் பாகிஸ்தான் முன்னாள் ஏர் மார்ஷல் மசூத் அக்தர் டிவி விவாத நிகழ்ச்சியில் பேசிய வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. அதில் முன்னாள் ஏர் மார்ஷல் மசூத் அக்தர் கூறுகையில், பாகிஸ்தானிடம் வெறும் 6 லட்சம் வீரர்கள் மட்டுமே இருக்கின்றனர். ஆனால் இந்திய ராணுவத்தின் வலிமை 16 லட்சமாக உள்ளது. அதனால் எந்த வகையான போரிலும் பாகிஸ்தானை காப்பாற்ற முடியாது.
அதனால் பாகிஸ்தான் தலைவர்களின் பணி எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு முடிவு எடுப்பதுதான். இப்போது நடந்து வரும் சம்பவங்கள் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. இதற்கு நம்மிடம் எந்த பதில் இல்லை. நமது சூழலும் தொடர்ந்து மோசமாகி கொண்டே செல்கிறது. அமெரிக்கா தலையிடாத வரை இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை குறைக்க முடியாது.
पाकिस्तानी सेना के रिटायर्ड अधिकारी बता रहे हैं इंडिया की 16 लाख की सेना के आगे हमारे मात्र 6 लाख सैनिक ज्यादा टिक नहीं पायेंगे।
— Ravi Bhadoria (@ravibhadoria) May 10, 2025
अब तो अमेरिका और चीन ही युद्ध रोककर हमें बचा सकते हैं इंडिया से। pic.twitter.com/RW83rMmrU2
அடுத்தடுத்து 4 மிகப்பெரிய தாக்குதலை நடத்த இந்தியா திட்டமிட்டு வருகிறது. அதனால் பாகிஸ்தான் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பதை சிந்திக்கவில்லை என்றால், நம் சூழல் மேலும் மோசமான நிலைக்கு செல்லும் என்று தெரிவித்துள்ளார். இந்த வீடியோ இந்திய சோசியல் மீடியாவில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications