ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ரத்து? முக்கிய முடிவு எடுக்கும் பிசிசிஐ.. ராஜீவ் சுக்லா சொன்ன பாய்ண்ட்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் அறிவிக்கப்படாத போர் தொடங்கியுள்ள நிலையில், ஐபிஎல் தொடர் ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நாளைய ஐபிஎல் தொடரை தொடர்ந்து நடத்துவது தொடர்பாக பிசிசிஐ நிர்வாகிகள் ஆலோசனை செய்ய உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் மூலம் தரமான பதிலடியை கொடுத்தது. இந்த ஆபரேஷன் சிந்தூர் மூலமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையில் இருந்த பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த நிலையில் பாகிஸ்தான் ராணுவம் பதில் தாக்குதலை தொடங்கி இருக்கிறது.

We will take a call on IPL tournament future depending on the situation tomorrow says BCCI vice president Rajeev Shukla

ட்ரோன் மற்றும் ஏவுகணை மூலமாக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்திருக்கிறது. இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், ஹிமாச்சல் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் பல்வேறு பகுதிகள் பிளாக் அவுட் செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்த மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே தரம்சாலாவில் நடைபெற்ற பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டுள்ளது. தரம்சாலாவில் உள்ள வீரர்கள் பாதுகாப்புடன் வெளியேற சிறப்பு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால், கிரிக்கெட் வீரர்கள் ரயிலில் பயணம் செய்ய உள்ளனர்.

இந்தியா - பாகிஸ்தான் இடையில் அறிவிக்கப்படாத போர் தொடங்கி இருப்பதால், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தொடர்ந்து நடத்தப்படுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஐபிஎல் நிர்வாகக் குழு கூட்டம் கூடி விரைவில் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனிடையே பிசிசிஐ நிர்வாகி ராஜீவ் சுக்லா பேசுகையில், கிரிக்கெட் வீரர்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் கிடையாது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை தொடர்ந்து நடத்துவது தொடர்பாக நாளை சூழல் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்தே முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார். பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், மக்களை ஒரே இடத்தில் கூட்டுவது சரியானதாக இருக்காது என்று பார்க்கப்படுகிறது. அதேபோல் ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடத்தப்பட்டால், பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள மாநிலங்களில் நடத்தப்படாது என்றும் பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+