தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுப்போம்: கோத்தபாய ராஜபக்சே
Subscribe to Oneindia Tamil
Recommended Video
பிரதமர் மோடி-கோத்தபாய இருவரும் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு
டெல்லி: தமிழக மீனவர்களின் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே உறுதியளித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடியை இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே இன்று சந்தித்து பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது கோட்டபாய ராஜபக்சே கூறுகையில், பிரதமர் மோடியுடன் மீனவர்கள் பிரச்சனை குறித்து விரிவாக விவாதித்தோம். இலங்கை கைப்பற்றியுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
மேலும் இருதரப்பு பாதுகாப்பு, பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்தும் விவாதித்தோம் என்றார்.












Click it and Unblock the Notifications