‛பத்மஸ்ரீ விருது வேண்டாம்’.. மோடியிடம் திரும்ப ஒப்படைக்கும் வீரேந்தர் சிங்! யார் இவர்? பின்னணி
டெல்லி: இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங் தனது பத்மஸ்ரீ விருதை பிரதமர் மோடியிடம் திரும்ப ஒப்படைப்பதாக பரபரப்பாக அறிவித்துள்ளார்.
ஏற்கனவே மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ஓய்வை அறிவித்த நிலையில் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பத்மஸ்ரீ விருதை திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ள நிலையில் வீரேந்தர் சிங் இந்த அறிவிப்பை செய்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் பாஜகவின் எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் தான்.

அதாவது பிரிஜ் பூஷண் சரண் சிங் இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்தார். இவர் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லியில் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இந்திய மல்யுத்த கூட்டமைப்புக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் புதிய தலைவராக இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் புதிய தலைவராக சஞ்சய் சிங் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கின் நெருங்கிய உதவியாளர் ஆவார். இதனால் வீரர், வீராங்கனைகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து மல்யுத்த வீராங்கனை சாக்ஷி மாலிக் ஓய்வை அறிவித்ததார். கண்ணீர் மல்க அவர் இந்த முடிவை பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். இதையடுத்து மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா பத்மஸ்ரீ விருதை திரும்ப ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடியின் வீட்டு வாசலில் நேற்று அவர் பத்மஸ்ரீ விருதை வைத்துவிட்டு சென்றார்.
இந்த வரிசையில் தற்போது மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங் இப்போது இணைந்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‛‛எனது சகோதரியும், நாட்டின் மகளுமான சாக்ஷி மாலிக்குக்காக எனது பத்மஸ்ரீ விருதை திரும்ப ஒப்படைக்கிறேன். பிரதமர் மோடி ஜி, உங்களின் மகளும், எனது சகோதரியுமான சாக்ஷி மாலிக்கை நினைத்து நான் பெருமைப்படுகிறேன். இந்த விஷயத்தின் நாட்டின் சிறந்த விளையாட்டு வீரர்கள் தங்களின் முடிவை தெரிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார். என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications