Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"பீர், நெட்பிக்ஸ், சிகரெட்கள்.." சாரதாவை 35 துண்டாக வெட்டிய போது.. பயப்படாமல் சில் செய்த கொலையாளி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தலைநகர் டெல்லியில் சாரதா படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் புதிய பகீர் தகவல்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

தலைநகர் டெல்லியில் 26 வயதே ஆன சாரதா என்ற பெண் படுகொலை செய்யப்பட்டார். அவர் உயிருக்கு உயிராகக் காதலித்த அப்தாப் அமீன் என்ற நபர் தான் காதலியைக் கொன்றார்.

மேலும், உடலையும் துண்டு துண்டாக வெட்டியுள்ளார். இந்த கொடூரம் குறித்து ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்கள் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கச் செய்வதாக உள்ளது.

 கொடூரம்

கொடூரம்

இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால், சாரதாவுக்கும் அவரது தந்தைக்கும் சில மாதங்களாகவே பேச்சுவார்த்தை இல்லை. இருப்பினும், சாரதாவின் சமூக வலைத்தள பக்கங்களில் எந்தவொரு பதிவும் சில மாதங்களகவே இல்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது தந்தை சாரதாவின் நண்பர்களிடம் விசாரித்த போது தான் அவர் மாயமானது தெரிய வந்தது. இது தொடர்பாக அவரது தந்தை அளித்த புகாரில் தான் இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 கொலை

கொலை

காதலனுக்காக அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு வந்த சாரதா, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டுள்ளார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டையும் ஏற்பட்டு உள்ளது. இப்படித்தான் கடந்த மே மாதம் சாரதா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்க அது, அப்படியே வாக்குவாதமாக முற்றியுள்ளது. அப்போது தான் சாரதாவை அவரது காதலனே கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளார்.

 10 மணி நேரம்

10 மணி நேரம்

சாரதாவை கொலை செய்த பின், ஆதாரங்களை அளிக்க அப்தாப் செய்த செயல்கள் தான் கொடூரத்தின் உச்சம். இதற்கிடையே இது தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளது. கொலை செய்த பின்னர், சாரதாவின் உடலை 35 துண்டுகளாக அப்தாப் வெட்டியுள்ளான். எப்படி உடலை வெட்ட வேண்டும் என்பை கூகுளில் படித்துத் தெரிந்து கொண்ட அவன், உடலைத் துண்டுகளாக வெட்ட சுமார் 10 மணி நேரம் வரை ஆனதாக போலீசாரிடம் தெரிவித்தார்.

 பீர், சிகரெட்

பீர், சிகரெட்

இடையில் டயர்ட் ஆன போதெல்லாம் பீரை குடித்து ஓய்வெடுத்ததாகவும் அவன் போலீசாரிடம் தெரிவித்துள்ளான். மேலும், இதனால் ஏற்பட்ட ரத்த கறையை முழுமையாகத் துடைக்கப் பல மணி நேரம் ஆனதாகவும் அவன் தனது வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளான். இடையில் பீர் குடித்தும் சிகரெட் புகைத்தும் ஓய்வு எடுத்துக் கொண்டதாகவும் அவன் போலீசாரிடம் தெரிவித்த வாக்கு மூலத்தில் குறிப்பிட்டு உள்ளான்.

நெட்பிளிக்ஸ்

நெட்பிளிக்ஸ்

சாரதாவின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி முடித்த பிறகு, எந்தவொரு பதற்றமும் இல்லாமல் அப்தாப் உணவு ஆர்டர் செயலி மூலம் உணவை ஆர்டர் செய்துள்ளான். மேலும், சாரதாவை கொலை செய்து சில மணி நேரத்திலேயே உணவைச் சாப்பிடும், நெட்பிளிக்ஸில் படத்தையும் பார்த்துள்ளான். சாரதாவை கொலை செய்தது குறித்து எந்தவொரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இதையெல்லாம் செய்துள்ளான்.

 நீதிமன்றம்

நீதிமன்றம்

நாட்டையே இந்தச் சம்பவம் உலுக்கி உள்ள நிலையில், கைது செய்யப்பட்ட அப்தாப் இன்று டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஐந்து நாட்கள் அப்தாபை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்தனர். அப்தாபை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பெற போலீசார் முடிவு செய்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+