பஞ்சாப்பில் நடந்தது என்ன?... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பிரதமர் மோடி விளக்கம்
பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்த பாதுகாப்பு குறைபாடு சம்பவம் குறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் பாதுகாப்பு மீறல் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்துள்ளார். குடியரசுத்தலைவரை அவரது மாளிகையில் நேரில் சந்தித்து பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video

பஞ்சாப்பில் இருக்கும் ஹுசைன்வாலா என்ற பகுதியில் உள்ள தேசிய தியாகிகள் நினைவு இடத்தில் நடக்க இருந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்ள இருந்தார். இன்று திட்டப்படி பிரதமர் மோடி பதிண்டா விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஹுசைன்வாலா பகுதிக்கு செல்ல வேண்டும். மோசமான வானிலை காரணமாக கடைசி நேரத்தில் இவர் காரில் புறப்பட்டார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து அங்கு போராட்டம் நடைபெற்றது.

பாலம் ஒன்றுக்கு கீழே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பிரதமர் மோடியின் கார் அந்த பாலத்திலேயே முடங்கியது. 20 நிமிடமாக கார் அங்கேயே முடங்கியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி பிரதமர் மோடியின் எஸ்பிஜி பாதுகாப்பு படையினர் காரை சுற்றி நின்றனர். கடைசி வரை அங்கு போராட்டம் முடிவிற்கு வரவில்லை.
கடைசியில் பாதுகாப்பை காரணம் காட்டி இந்த கூட்டமே மொத்தமாக ரத்து செய்யப்பட்டது. பிரதமர் மோடி மீண்டும் இதனால் பதிண்டா விமான நிலையத்திற்கு திரும்பினார். இந்த சம்பவத்திற்கு பின் பாதுகாப்பு குறைபாடுதான் முழு காரணம். எஸ்பிஜி பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்து இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் விமர்சனம் செய்துள்ளது. மாநில போலீசார் மற்றும் அரசு மீதும் மத்திய உள்துறை அமைச்சகம் விமர்சனம் செய்துள்ளது.

இந்த நிலையில் இது குறித்து பஞ்சாப் மாநில முதல்வர் விளக்கம் அளித்திருந்தார். இதனையடுத்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (சிசிஎஸ்) கூட்டமும் நடைபெற்றது, அங்கு இந்த பிரச்சினை விவாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் நடந்த சம்பவம் குறித்து பாஜக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடையே வார்த்தைப் போரும் நடைபெற்று வருகிறது.
இதனிடையே பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு பற்றி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைபேசியில் பேசும் போது கவலை தெரிவித்திருந்தார். பிரதமரை நேரில் வருமாறும் அவர் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றுள்ள மோடி, பஞ்சாப் மாநிலத்தில் நேற்றைய தினம் என்ன நடந்தது என்பது பற்றி நேரில் விளக்கம் அளித்துள்ளார்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
Magaram: சிகரத்தில் ஏறப்போகும் மகர ராசியினர்.. எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்திருக்கு -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள் -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
மணிக்கணக்கில் வெயிட்டிங்.. இரவில் எடப்பாடி கே.பழனிசாமியை அதிர வைத்த அமித் ஷாவின் உளவுத்துறை அறிக்கை -
6 + 1 முடிந்த டீல்? திமுக கூட்டணியில் விசிகவுக்கு எத்தனை தொகுதி? திருமாவை சமாதானம் செய்த ஸ்டாலின் -
ஒரு தொகுதிக்கு ஒருவர்.. புஸ்ஸி ஆனந்த் பரிந்துரை கட்டாயம்.. விஜய் செய்யும் புது வகையான நேர்காணல்! -
ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா.. கச்சா எண்ணெய் மீதான தடையை நீக்க முடிவு.. அடிபணிந்த டிரம்ப் -
VCK: 10+1 கேட்டு விசிக விடாபிடி! திருமாவளவன் பிடிவாதத்தின் பின்னணி என்ன? இறங்கி வரும் ஸ்டாலின்? -
அமெரிக்கா.. இந்த ஒற்றைச் சொல்.. இனி உலகத்தை ஆட்டிப்படைக்காது.. வீழும் சாம்ராஜ்ஜியம்.. என்ன நடக்குது? -
அண்ணாமலை + நயினார் + வானதி.. தோல்வி பயத்தில் தொகுதி மாற தயாராகும் பாஜக தலைவர்கள்.. இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications