Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பஞ்சாப்பில் நடந்தது என்ன?... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பிரதமர் மோடி விளக்கம்

பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ந்த பாதுகாப்பு குறைபாடு சம்பவம் குறித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி நேரில் சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது நடந்ததாகக் கூறப்படும் பாதுகாப்பு மீறல் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கவலை தெரிவித்துள்ளார். குடியரசுத்தலைவரை அவரது மாளிகையில் நேரில் சந்தித்து பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

    BJP VS Congress | Punjab சம்பவம் திட்டமிட்ட சதியா? | PM Modis Convoy Blocked | Oneindia Tamil

    பஞ்சாப்பில் இருக்கும் ஹுசைன்வாலா என்ற பகுதியில் உள்ள தேசிய தியாகிகள் நினைவு இடத்தில் நடக்க இருந்த நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி இன்று கலந்து கொள்ள இருந்தார். இன்று திட்டப்படி பிரதமர் மோடி பதிண்டா விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஹுசைன்வாலா பகுதிக்கு செல்ல வேண்டும். மோசமான வானிலை காரணமாக கடைசி நேரத்தில் இவர் காரில் புறப்பட்டார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகையை எதிர்த்து அங்கு போராட்டம் நடைபெற்றது.

    What happened in Punjab? ... Prime Minister Modi meets President Ramnath kovind

    பாலம் ஒன்றுக்கு கீழே விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பிரதமர் மோடியின் கார் அந்த பாலத்திலேயே முடங்கியது. 20 நிமிடமாக கார் அங்கேயே முடங்கியது. இதையடுத்து பாதுகாப்பு கருதி பிரதமர் மோடியின் எஸ்பிஜி பாதுகாப்பு படையினர் காரை சுற்றி நின்றனர். கடைசி வரை அங்கு போராட்டம் முடிவிற்கு வரவில்லை.

    கடைசியில் பாதுகாப்பை காரணம் காட்டி இந்த கூட்டமே மொத்தமாக ரத்து செய்யப்பட்டது. பிரதமர் மோடி மீண்டும் இதனால் பதிண்டா விமான நிலையத்திற்கு திரும்பினார். இந்த சம்பவத்திற்கு பின் பாதுகாப்பு குறைபாடுதான் முழு காரணம். எஸ்பிஜி பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்து இருக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் விமர்சனம் செய்துள்ளது. மாநில போலீசார் மற்றும் அரசு மீதும் மத்திய உள்துறை அமைச்சகம் விமர்சனம் செய்துள்ளது.

    What happened in Punjab? ... Prime Minister Modi meets President Ramnath kovind

    இந்த நிலையில் இது குறித்து பஞ்சாப் மாநில முதல்வர் விளக்கம் அளித்திருந்தார். இதனையடுத்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழுவின் (சிசிஎஸ்) கூட்டமும் நடைபெற்றது, அங்கு இந்த பிரச்சினை விவாதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் நடந்த சம்பவம் குறித்து பாஜக, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளிடையே வார்த்தைப் போரும் நடைபெற்று வருகிறது.

    இதனிடையே பஞ்சாப் மாநிலத்தில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு பற்றி குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தொலைபேசியில் பேசும் போது கவலை தெரிவித்திருந்தார். பிரதமரை நேரில் வருமாறும் அவர் அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றுள்ள மோடி, பஞ்சாப் மாநிலத்தில் நேற்றைய தினம் என்ன நடந்தது என்பது பற்றி நேரில் விளக்கம் அளித்துள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+