Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

முப்படைகளில் 4 ஆண்டுகள் பணி.. அக்னிபாத் திட்டத்தின் சிறப்பசங்கள் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றில் 4 ஆண்டு பணியாற்றும் திட்டமாக அக்னிபாத் உள்ளது. இந்த திட்டத்தில் சேவை நிதி, இழப்பீடு, இன்சுரன்ஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.

Recommended Video

    Agnipath In Indian Army | Agnipath என்றால் என்ன? யார் இந்த Agniveer? | #Defence

    இந்தியாவின் பாதுகாப்பில் ராணுவம், விமானப்படை, கப்பற்படை ஆகியவை முக்கிய பங்காற்றி வருகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளியில் இந்த முப்படைகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் தான் முப்படைகளில் குறுகிய காலம் சேவையாற்றும் ‛அக்னிபாத்' திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை முப்படை தளபதிகளுடன் சேர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வெளியிட்டுள்ளார். அக்னிபாத் திட்டத்தின் சிறப்பம்சங்கள் வருமாறு:

    4 ஆண்டு பணி

    4 ஆண்டு பணி

    அக்னிபாத் திட்டம் மூலம் ராணுவம், கடற்படை, விமானப்படைக்கு ஆள்சேர்ப்பு நடைபெறும். 17.5 வயது முதல் 21 வயதுக்குள் உள்ளவர்கள் இதில் சேரலாம். இவர்கள் அக்னிவீர் என அழைக்கப்படுவர். இத்திட்டத்தில் ஒருவர் நான்கு ஆண்டுகள் பணியில் இருக்கலாம். முப்படையில் பணியில் சேர்வோருக்கு ஏற்கனவே நடைமுறையில் உள்ள கல்வி தகுதியே இதற்கும் பொருந்தும். ஆட்கள் தேர்வு அடுத்த 90 நாட்களில் துவங்க உள்ளது. 46 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். முறையான அறிவிப்புக்கு பிறகு 6 மாத கால இடைவெளியில் ஆட்சேர்ப்பு நடவடிக்கை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சம்பளம் எவ்வளவு?

    சம்பளம் எவ்வளவு?

    இந்த நான்கு ஆண்டுகள் என்பது பயிற்சி காலத்தையும் உள்ளடக்கியாதாகும். மாத சம்பளமாக படிகளுடன் குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரமும் அதிகபட்சமாக ரூ.40 ஆயிரம் வரையும் கிடைக்கும். அதன்படி முதல் ஆண்டு ரூ.30 ஆயிரமும், 2ம் ஆண்டில் ரூ.33,000ம், 3-ம் ஆண்டில் ரூ.36,500, 4-ம் ஆண்டில் ரூ.40,000 ஆக ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பிடித்தம் எவ்வளவு?

    பிடித்தம் எவ்வளவு?

    இதில் 30 சதவீத தொகை பங்களிப்பு தொகையாகப் பிடிக்கப்படும். எஞ்சிய 70 சதவீத தொகை வழங்கப்படும். அதன்படி முதல் மாதத்தில் ரூ.9 ஆயிரம் சேவை நிதிக்கான பங்களிப்பு தொகையாக பிடிக்கப்பட்டு ரூ.21 ஆயிரம் மட்டும் கையில் கிடைக்கும். 4வது ஆண்டில் மட்டும் சம்பளமாக ரூ.6.92 லட்சம் கிடைக்கும். பிடித்ததற்கு ஏற்ப மத்திய அரசு சார்பில் ராணுவ வீரர்களின் சேவை நிதிக்கும் பணம் வழங்கப்படும். இத்தொகை இறுதியில் சேவை நிதியாக வழங்கப்படும்.

    இன்சூரன்ஸ் வசதி

    இன்சூரன்ஸ் வசதி

    மேலும் வீரர்களின் பங்களிப்பு இன்றி ரூ.48 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் வசதி கிடைக்கும். இத்தகைய நியமனத்தில் 4 ஆண்டு பணிக்கு பிறகு 75 சதவீதம் பேர் திருப்பி அனுப்பப்படுவர். 25 சதவீதம் பேர் மட்டும் தக்க வைக்கப்படுவர். இவர்கள் வழக்கமான ராணுவ வீரர்களை போல் 15 ஆண்டுகள் பணியை தொடரலாம். ராணுவத்தில் இருந்து திரும்பும் வீரர்களுக்கு சான்றுகள் மற்றும் சேவை நிதியாக ரூ.11.71 லட்சம் வழங்கப்படும். இதற்கு வரி விலக்கு உண்டு. ஆனால் இவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்காது.

     இழப்பீடு எவ்வளவு?

    இழப்பீடு எவ்வளவு?

    இதற்கிடையே பணியின்போது வீரமரணம் அடைந்தால் ரூ.44 லட்சம் இழப்பீடுாக வழங்கப்படும். மாற்றுத்திறனாளியாக மாறினால் மாற்றத்திறனுக்கு ஏற்ப இழப்பீடு வழங்கப்படும். அதன்படி 75 சதவீத மாற்றத்திறனுக்கு ரூ.25 லட்சம், 50 சதவீத மாற்றுத்திறனுக்கு ரூ.15 லட்சம் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+