Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அமலாக்கத்துறை எஸ்கே மிஸ்ராவின் கடைசி ரெய்டு எங்கே தெரியுமா.. தமிழகம் முழுக்க நடந்த அந்த சோதனை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அமலாக்கத்துறைக்கு இப்போது புதிய இடைக்கால இயக்குநராக ராகுல் நவீன் நியமிக்கப்பட்டுள்ளார். இத்தனை காலம் அதன் இயக்குநராக எஸ்கே மிஸ்ரா இருந்த நிலையில், அவரது தலைமையில் அமலாக்கத்துறை நடத்திய கடைசி ரெய்டு என்ன என்று பார்க்கலாம்.

அமலாக்கத் துறையின் இயக்குநராக இருப்பவர் எஸ்கே மிஸ்ரா. இவரது பதவிக் காலம் இன்றுடன் (செப். 15) நிறைவடைகிறது. ஏற்கனவே இவரது பதவிக் காலத்தை நீட்டிக்கக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் கூறி இருந்தது.

 What is the last raid of ED under the leadership of SK Mishra

இந்தச் சூழலில் அமலாக்கத்துறை இடைக்கால இயக்குநராக ராகுல் நவீன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அமலாக்கத்துறைக்கு புதிய இயக்குநர் நியமிக்கப்படும் வரை ராகுல் நவீன், பொறுப்பு இயக்குநராகச் செயல்படுவார்.

எஸ்கே மிஸ்ரா: இது ஒரு பக்கம் இருக்க எஸ்கே மிஸ்ரா தலைமையில் அமலாக்கத்துறை நடத்திய கடைசி ரெய்டு தமிழ்நாட்டில் தான். இது குறித்து விரிவாக அதற்கு முன்பு எஸ்கே மிஸ்ரா குறித்தும் அவரது பதவி நீதிமன்றம் வரை சென்றது எப்படி என்பது குறித்தும் நாம் இதில் பார்க்கலாம். 62 வயதான சஞ்சய் குமார் மிஸ்ரா 1984 இல் இந்திய வருவாய் சேவை (IRS) அதிகாரியாகக் குடிமைப் பணியில் இணைந்தார். அமலாக்க இயக்குநரகத்திற்கு வருவதற்கு முன்பு அவர் டெல்லியில் வருமான வரித்துறையின் தலைமை ஆணையராக இருந்தார்.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த எஸ்கே மிஸ்ரா, வருமான வரித்துறையில் பல முக்கிய வழக்குகளைச் சிறப்பாக விசாரித்தாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவரை அமலாக்கத் துறை இயக்குநராக நியமித்தது மத்திய அரசு.. முதலில் கடந்த 2018 அக்டோபரில் இடைக்கால இயக்குநராக மூன்று மாதங்களுக்கு எஸ்கே மிஸ்ரா நியமிக்கப்பட்ட நிலையில், அதைத்தொடர்ந்து நவம்பர் 2018இல் அவர் இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

பதவி நீட்டிப்பு: எஸ்கே மிஸ்ராவின் பதவிக்காலம் 2020இல் நிறைவடைய இருந்த நிலையில், மத்திய அரசு அதைச் சத்தமில்லாமல் அதை ஓராண்டிற்கு முதலில் நீட்டித்தது. அதைத் தொடர்ந்து நவ. 2021இல் அவரது பதவி மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கப்பட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ இயக்குநர்கள் 5 ஆண்டுகள் பதவியில் இருக்கும் வகையிலான சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.

தொடர்ந்து நவ. 2022இல் மிஸ்ராவுக்கு 3ஆவது முறையாக 2023 நவ. 18 வரை பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பலரும் வழக்கு தொடர்ந்த நிலையில், செப்டம்பர் 15-க்குப் பின்னர் எஸ்கே மிஸ்ரா எந்த நிலையிலும் அமலாக்கத்துறை இயக்குநராக நீடிக்கவே கூடாது என்று உத்தரவிட்டது. மேலும். செப்டம்பர் 15-ந் தேதி நள்ளிரவுடன் எஸ்கே மிஸ்ராவின் பதவிக் காலம் முடிவடைந்ததாகக் கருதப்படும் என உத்தரவிட்டது.. அதைத் தொடர்ந்தே இன்று புதிய இடைக்கால இயக்குநர் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடைசி ரெய்டு: சரி, எஸ்கே மிஸ்ரா தலைமையில் இருந்த சமயத்தில் அமலாக்கத்துறை நடத்திய கடைசி ரெய்டு குறித்து பார்க்கலாம். இந்த ரெய்டும் தமிழ்நாட்டில் தான் நடந்துள்ளது. கடந்த செப். 12ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் 34 இடங்களில் ரெய்டு நடந்தது. இதுவே எஸ்கே மிஸ்ரா தலைமை பொறுப்பில் இருந்த போது அமலாக்கத் துறை நடத்திய கடைசி ரெய்டாக மாறிப் போனது. இதில் 6 மாவட்டங்களில் உள்ள 8 மணல் குவாரிகளில் கடந்த 12ஆம் தேதி ரெய்டு நடத்தப்பட்டது.

எஸ்.ராமச்சந்திரன், கே.ரத்தினம், கரிகாலன் ஆடிட்டர் பி.சண்முகராஜ் என மொத்தம் 34 இடங்களில் ரெய்டு நடைபெற்றன. இந்த ரெய்டில் 12.82 கோடி ரூபாயை அமலாக்கத் துறை கைப்பற்றி இருக்கிறது. கணக்கில் வராத ₹ 2.33 கோடி பணம், ₹56.86 லட்சம் மதிப்புள்ள 1024.6 கிராம் எடையுள்ள தங்கம் ஆகியவற்றை அமலாக்கத் துறை கைப்பற்றி இருக்கிறது. இதுவே எஸ்கே மிஸ்ரா தலைமை பொறுப்பில் இருந்த போது நடந்த கடைசி ரெய்டாக அமைந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+