சந்திரயான் 3: 14 நாள் கழித்து ரோவரும் லேண்டரும் பூமிக்கு வந்துவிடுமா? விஞ்ஞானிகளின் பிளான் பி என்ன?
டெல்லி: சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து பிரிந்த விக்ரம், பிரக்யான் ஆகிய லேண்டர் மற்றும் ரோவர் 14 நாட்கள் கழித்து செயலிழந்து பூமிக்கு சந்திரயான் 3 திரும்பி விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நிலவின் தென் பகுதியில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான் 3 விண்கலம் அனுப்பப்பட்டது. இந்த விண்கலத்தில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் உள்ளது. விக்ரம் லேண்டர் விண்கலத்தில் இருந்து பிரிந்தவுடன் ரோவரும் இறங்கியது.

அமெரிக்கா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் நிலவின் மத்திய பகுதிக்கே தரையிறங்கிய நிலையில் சூரிய வெளிச்சமே இல்லாத தென் பகுதியில் தரையிறங்கிய முதல் நாடு இந்தியாதான். இது வரலாற்று சாதனையாகும்.
பிரக்யான் ரோவர் நிலவில் ஆங்காங்கே சுற்றி ஆராய்ச்சிக்கு உண்டான படங்களை எடுத்து அனுப்பும். முக்கியமாக நிலவின் தென் பகுதியில் மண் இருக்கிறதா, தண்ணீர் இருக்கிறதா, அந்த தண்ணீரிலிருந்து ஆக்ஸிஜன் கிடைக்குமா இங்கு மனிதர்கள் வாழ முடியுமா போன்ற ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும். தற்போது நிலவில் சூரிய ஒளி படுகிறது.
அதாவது 14 நாட்கள் சூரிய ஒளி வரும், மீதி 14 நாட்கள் சந்திரன் இருளில் மூழ்கி இருக்கும். தற்போது சூரிய வெளிச்சம் படும் நேரத்தில் ரோவர் இறங்கியுள்ளது. இது இந்த 14 நாட்களுக்கு நிலவை சுற்றி சுற்றி போய் புகைப்படம் எடுத்துக் கொண்டுவிடும். அதன் பிறகு பூமிக்கு ரோவரும் லேண்டரும் திரும்பி வந்துவிடுமா? வெறும் 14 நாட்கள் ஆராய்ச்சிக்காகவா இத்தனை கோடிகள் செலவிடப்பட்டன என்ற கேள்வி எழுகின்றன.
இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில் சூரிய வெளிச்சம் படும் இந்த 14 நாட்கள் புகைப்படங்களை எடுப்பதுடன் தான் இயங்குவதற்கு தேவையான பேட்டரிக்கான சார்ஜை ரோவர், லேண்டர், ஆகியவை சேமித்து வைத்திருக்கும். இதைத் தொடர்ந்து 14 நாட்களும் அதாவது இருள் வரும் இந்த நாட்களில் ரோவரும் ஸ்லீப் மோடிற்கு சென்றுவிடும்.
அதன்பிறகு சூரிய ஒளி படும் போது சேமித்து வைத்த பேட்டரியை கொண்டு இயங்கி புகைப்படங்களை அனுப்பும் வகையில் விஞ்ஞானிகள் வடிவமைத்திருக்கிறார்கள். 14 நாட்கள் கழித்து ஸ்லீப் மோடுக்கு போய் மீண்டும் ரோவர் பணியாற்றினால் அதுவும் ஒரு சாதனையே என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications