ஷாக்! கிரிமினல் வழக்கை எதிர்கொள்ளும் எம்எல்ஏக்கள்! தமிழகத்துக்கு 6வது இடம்! இவ்வளவு பேரா? அடடா
டெல்லி: இந்தியாவில் உள்ள எம்எல்ஏக்களில் 44 சதவீதம் பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருப்பதாக ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் கிரிமினல் வழக்குகளை எதிர்கொள்ளும் எம்எல்ஏக்கள் அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியல் வெளியாகி உள்ள நிலையில் கேரளா முதலிடத்திலும், தமிழ்நாடு 6வது இடத்தில் இருக்கும் ஷாக் தகவல் வெளியாகி உள்ளது.
தேர்தல் சமயத்தில் ஒவ்வொரு கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விபரங்கள், அவர்கள் மீது உள்ள வழக்குகள், அவர்களின் கல்வி தகுதிகள் உள்ளிட்ட விபரங்களை ஏடிஆர் எனும் ஜனநாயக சீர்த்திருத்த சங்கம் வழங்கி வருகிறது.

மேலும் நாட்டில் உள்ள எம்பிக்கள், எம்எல்எல்கள் தொடர்பாக பல்வேறு விபரங்களை இந்த சங்கம் வெளியிட்டு வருகிறது. இவர்கள் வெளியிடும் ஒவ்வொரு தகவல்களும் தேர்தல் சமயத்தில் எம்பி, எம்எல்ஏக்கள் தாக்கல் செய்யும் வேட்புமனுக்கள் அடிப்படையில் தான் இருக்கும்.
அந்த வகையில் தான் தற்போது ஜனநாயக சீர்த்திருத்த சங்கம், தேசிய தேர்தல் கண்காட்சி அமைப்புடன் சேர்ந்து புதிய ஆய்வை மேற்கொண்டது. இந்தியாவில் மொத்தம் 28 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள எம்எல்ஏக்களில் மொத்தம் எவ்வளவு பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது என்பது பற்றிய தகவல்களை சேகரிக்கப்பட்டன. தற்போது இந்த ஆய்வின் முடிவு வெளியிட்டுள்ளது.
அதன்படி இந்தியாவில் மொத்தம் 4,033 பேர் எம்எல்ஏக்களாக உள்ளனர். இதில் 4,001 பேரின் வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்பட்டது. இவர்களில் 44 சதவீதம் எம்எல்ஏக்கள் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. இவர்களில் 1,136 எம்எல்ஏக்கள் அதாது 28 சதவீதம் பேர் மீது கொலை, கொலை முயற்சி, கடத்தில், பெண்களுக்குஎதிரான குற்றங்கள் நிலுவையில் உள்ளது.
மாநிலம் வாரியாக பார்த்தால் கேரளாவில் உள்ள எம்எல்ஏக்கள் மீது தான் அதிக கிரிமினல் வழக்குகள் உள்ளன. கேரளாவில் மொத்தம் 135 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் 95 பேர் மீது கிரிமினல் வழக்கு உள்ளது. இது அந்த மாநிலத்தின் மொத்த எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்த்தால் 70 சதவீதமாகும்.
இதற்கு அடுத்தப்படியாக பீகார் மாநிலத்தில் உள்ள 242 எம்எல்ஏக்களில் 161 பேர் மீது (67 சதவீதம்) கிரிமினல் வழக்கு உள்ளது. டெல்லியில் 70 எம்எல்ஏக்களில் 44 பேர் (63 சதவீதம்) மீதும், மகாராஷ்டிராவில் 284 எம்எல்ஏக்களில் 175 பேர் (62 சதவீதம்) மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் 118 எம்எல்ஏக்களில் 72 பேர் (61 சதவீதம்) மீதும், தமிழகத்தில் 234 எம்எல்ஏக்களில் 134 பேர் (60 சதவீதம்) மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதன்படி பார்த்தால் இந்தியாவில் கிரிமினல் வழக்குகள் கொண்ட எம்எல்ஏக்களின் பட்டியலில் தமிழ்நாடு 6வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஈரானை தாக்க.. இந்திய துறைமுகத்தை பயன்படுத்தியதா அமெரிக்கா? மத்திய அரசு மறுப்பு -
இந்தியாவை நெருங்கிய போர்.. சைலண்ட் மோடில் மத்திய அரசு! இலங்கை அசத்துதே! -
ஹார்முஸ் ஜலசந்தியில் முடங்கிய கப்பல்கள்.. இந்தியாவில் எரிபொருள் விற்பனைக்கு கட்டுப்பாடு? பகீர் தகவல் -
அந்த 15 நிமிடம்.. ஒரு டின்னரில் மொத்தமாக அழிந்து போன நேபாள அரசு குடும்பம்.. என்ன நடந்தது தெரியுமா? -
பறிபோன இந்திய உயிர்கள்.. ஈரான் தாக்குதலில் கேப்டன் ஆஷிஷ் உட்பட இருவர் உயிரிழப்பு.. அதிர்ச்சி தகவல் -
இந்தியாவை சூளும் போர் மேகம்.. இந்திய பெருங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலை தாக்கிய ஈரான் - பதற்றம் -
30 நாட்கள்.. ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கிக்கோங்க.. அமெரிக்காவிடம் அனுமதி பெற்ற இந்தியா! -
வளைகுடா போரால்.. வரலாறு காணாத அளவில் சரிந்த இந்திய ரூபாயின் மதிப்பு! மொத்தமும் போச்சு -
ஹேப்பி நியூஸ் பெற்றோர்களுக்கு! இந்தியாவில் X தளத்தில் அந்த வீடியோக்களுக்கு தடை.. எலான் மஸ்க் முடிவு -
இந்தியா டூ ஈரான்.. புறப்பட்ட ஈரான் போர்க்கப்பலை மூழ்கடித்த அமெரிக்க நீர்மூழ்கி கப்பல்.. பின்னணி -
Iran War: இந்தியாவை நெருங்கிய போர்? இந்திய பெருங்கடல் அருகே மூழ்கிய ஈரான் போர்க்கப்பல்.. 30 மாலுமிகளை மீட்ட இலங்கை -
அரபு நாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கு உதவி எண்கள்.. ஈரான் போரால் கட்டுப்பாட்டு அறைகள் திறப்பு












Click it and Unblock the Notifications