பிரதமர் நிவாரண நிதியில் சேர்ந்த ரூ. 200 கோடி... எப்படி வந்தது... யார் கொடுத்தது!!
டெல்லி: பிரதமர் நிவாரண நிதிக்கு ரிசர்வ் வங்கி, ஏழு பொதுத்துறை வங்கிகள், ஏழு நிதித்துறை நிறுவனங்கள் ரூ. 200 கோடி நிதி அளித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இந்த தகவல் வெளியாகியுள்ளது. ரிசர்வ் வங்கி, ஏழு பொதுத்துறை வங்கிகள், ஏழு நிதித்துறை நிறுவனங்களின் ஊழியர்களிடம் இருந்து சம்பளம் பிடிக்கப்பட்டு பிரதமர் நிவாரண நிதிக்கு அளிக்கப்பட்டுள்ளது.

எல்ஐசி மற்றும் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகியவை ரூ. 144.5 கோடி அளவிற்கு நிதி வழங்கியுள்ளன. எல்ஐ சி மட்டும் ரூ. 113.63 கோடியை வழங்கியுள்ளது. இதில் ரூ. 5 கோடி ஊழியர்களின் சம்பளத்தில் இருந்தும், ரூல் 100 கோடி கார்ப்பரேட் தொடர்புகளில் இருந்தும், ரூ. 5 கோடி கோல்டன் ஜூப்ளி பவுண்டேஷனில் இருந்தும் வழங்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளில் எஸ்பிஐ வங்கி மட்டும் அதிகபட்சமாக ரூ. 107.95 கோடி வழங்கியுள்ளது. இது முழுக்க முழுக்க அரசு ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 7.34 கோடியை ஊழியர்கள் நன்கொடையாக வழங்கியதாக எஸ்பிஐ தெரிவித்துள்ளது.
பிரதமர் நிவாரண நிதியில் எவ்வளவு நிதி சேர்ந்துள்ளது என்பது குறித்த தகவலை வெளியிட மத்திய அரசு மறுத்துவிட்டது. இது தனி டிரஸ்ட் என்றும், பொதுத்துறை நிறுவனத்தின் கீழ் வராது என்றும் தெரிவித்து இருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனம் தெரிவித்து இருந்தன. வெளிப்படைத்தன்மை இல்லை என்று குற்றம்சாட்டி இருந்தனர்.
இந்த டிரஸ்டில் பிரதமர், உள்துறை அமைச்சர், நிதித்துறை அமைச்சர், பாதுகாப்புத்துறை அமைச்சர் ஆகியோர் உறுப்பினர்களாக இருக்கின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications