Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"மோடி vs மன்மோகன் சிங்.." இந்திய பொருளாதாரம் உண்மையில் யார் ஆட்சியில் சிறப்பாக இருந்தது.. பரபர சர்வே

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய பொருளாதாரத்தை யார் சிறப்பாகக் கையாண்டார்கள் என்பதற்கு மக்கள் என்ன சொல்லி இருக்கிறார்கள் என்பது குறித்த புது சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது. அது குறித்து நாம் பார்க்கலாம்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இந்தியப் பொருளாதாரம் தொடர்பாக விவாதங்கள் நடந்தன. முந்தைய அரசு பொருளாதாரத்தை எப்படிக் கையாண்டது என்பது தொடர்பாக மத்திய அரசு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அதேபோல எதிர்க்கட்சிகளும் அதற்குப் பதிலடியாகக் கறுப்பு அறிக்கையை வெளியிட்டன.

Who handled the economy better Modi vs Manmohan Singh What the India today survey says

இதற்கிடையே பிரபல ஆங்கில ஊடகமான இந்தியா டுடே லோக்சபா தேர்தல் தொடர்பான சர்வே ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில் மாநிலம் வாரியாக லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சி வெல்ல வாய்ப்பு இருக்கிறது எனச் சொல்லப்பட்டு இருந்தது.

மோடி vs மன்மோகன் சிங்: அதேபோல பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகிய இருவரில் இந்தியப் பொருளாதாரத்தை யார் சிறப்பாகக் கையாண்டார்கள் என்ற ஒரு கேள்வியும் கேட்கப்பட்டு இருந்தது. அதில் 46.6% பேர் மோடி தான் இந்தியப் பொருளாதாரத்தைச் சிறப்பாகக் கையாண்டதாகத் தெரிவித்துள்ளனர். அதேபோல 41.1% பேர் மன்மோகன் சிங் பொருளாதாரத்தைச் சரியாகக் கையாண்டதாகத் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஓராண்டாகவே பொருளாதாரத்தை யார் சிறப்பாகக் கையாண்டார் என்பதில் மோடிக்குத் தான் அதிக ஆதரவு இருந்துள்ளது. கடந்த 2023 ஜன. மாதம் இதே கேள்விக்கு 51% பேர் மோடி என்றும் 36% பேர் மட்டுமே மன்மோகன் சிங் என்றும் கூறியிருந்தனர். ஆனால், கடந்த ஆக. மாதம் நடத்தப்பட்ட சர்வேயில் மோடி சிறப்பாகப் பொருளாதாரத்தைக் கையாண்டதாக 44% பேர் மக்கள் மட்டுமே தெரிவித்தனர். அதேநேரம் மன்மோகன் சிங் என்று 42% பேர் சொன்னார்கள்.

வேலைவாய்ப்புகள்: அதேநேரம் மோடி அரசின் செயல்பாடுகள் குறித்த மற்ற கேள்விகளில் கலவையான பதிலே கிடைத்துள்ளது. மோடி அரசு தேவையான வேலைவாய்ப்புகளை உருவாக்கி இருக்கிறதா என்ற கேள்விக்கு 32% பேர் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளதாகத் தெரிவித்துள்ளனர். அதேநேரம் 25% பேர் ஓரளவுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி உள்ளதாக தெரிவித்துள்ளனர். அதேநேரம் 31% பேர் வேலைவாய்ப்பில் தேவையைப் பூர்த்தி செய்யவில்லை எனக் கூறியுள்ளனர்.

வேலையின்மை இப்போது நாட்டில் எவ்வளவு பெரிய பிரச்சினையாக இருக்கிறது என்ற கேள்விக்குக் குறைந்தது 54 சதவீதம் பேர் மிகவும் தீவிரமானதாக இருப்பதாகக் கூறியுள்ளனர், அதே நேரத்தில் 17 சதவீதம் பேர் இது ஓரளவு தீவிரமானதாக இருப்பதாகவும் 4 சதவீதம் பேர் மட்டுமே வேலையின்மை பிரச்சினை மோசமாக இல்லை என்று கூறியுள்ளனர்.

"நாட்டின் பெஸ்ட் முதல்வர்கள்.." டாப் இடத்தில் யோகி.. 2ஆம் இடத்தில் கெஜ்ரிவால்! அப்போ ஸ்டாலின் எங்கே

ஏழை மற்றும் பணக்காரர்கள்: மோடி அரசின் கொள்கைகள் நாட்டில் உள்ள ஏழை மற்றும் பணக்காரர்கள் இடையேயான வேறுபாடுகள் அதிகரித்துள்ளதா என்ற கேள்விக்கு 45 சதவீதம் பேர் ஆம் எனத் தெரிவித்துள்ளனர். அதேநேரம் 37 சதவீதம் பேர் ஏழை மற்றும் பணக்காரர்கள் இடையேயான வேறுபாடுகள் அதிகரிக்கவில்லை எனக் கூறியுள்ளனர்.

மோடி அரசின் கொள்கைகளால் பலனடைந்தது யார் என்பது குறித்த கேள்விக்கு 52 சதவீதம் பேர் பெரு நிறுவனங்களே அதிகம் பலனடைந்ததாகத் தெரிவித்துள்ளனர். அதேநேரம் 11 சதவீதம் பேர் சிறு தொழில்கள் அதிகம் பலனடைந்ததாகத் தெரிவித்துள்ளனர். மேலும், 9 சதவீதம் பேர் விவசாயிகள் அதிகம் பயனடைந்ததாகவும் 8 சதவீதம் பேர் மாத சம்பளம் பெறுவோர் பயனடைந்ததாகத் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்த சர்வேயில் 62% பேர் செலவுகள் சமாளிக்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.. 33% பேர் மட்டுமே செலவுகள் அதிகரித்துள்ள போதிலும், அது பெரியளவில் பாதிப்புகள் இல்லை என்று தெரிவித்துள்ளனர். இந்தியப் பொருளாதாரம் அடுத்த 6 மாதங்களில் எங்கே இருக்கும் என்ற கேள்விக்கு 34% பேர் மேலும் நல்ல நிலைக்குச் செல்லும் எனப் பதிலளித்துள்ளனர். 27% பேர் அதே நிலையில் இருக்கும் என்றும் 29% பேர் மேலும் மோசமடையலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+