தேர்தல் ஆணையர் அனூப் சந்திர பாண்டே-உ.பி.யில் பசு பாதுகாப்பு திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்தியவர்!
டெல்லி: மத்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவராக பொறுப்பேற்றுள்ள அனூப் சந்திர பாண்டே, உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பசு பாதுகாப்பு திட்டத்தை முழு வீச்சில் செயல்படுத்தியவர். 37 ஆண்டுகாலம் உ.பி. அரசில் தலைமை செயலாளர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்த அனூப் சந்திர பாண்டே, அடுத்த ஆண்டு உ.பி. சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. உ.பி. சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மத்தியில் ஆளும் பாஜக அடுத்தடுத்து அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அனூப் நியமனமும் விமர்சனமும்
உத்தரப்பிரதேச மாநில தலைமை செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்பு வகித்து 2019-ல் ஓய்வு பெற்ற அனூப் சந்திர பாண்டே திடீரென் மத்திய தேர்தல் ஆணையர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டார். உ.பி. தேர்தலை முன்வைத்தே அனூப் சந்திர பாண்டே தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார் என்கிற விமர்சனமும் உண்டு.

பசு பாதுகாப்பு திட்டத்தில் தீவிரம்
1984-ம் ஆண்டு பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான அனூப் சந்திர பாண்டே, தற்போதைய உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட மிக முக்கியமான பசு பாதுகாப்பு திட்டத்தை செயல்படுத்தியவர். அம்மாநிலத்தில் ரூ613 கோடி செலவில் பசு பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இது தொடர்பாக உ.பி.யில் மாவட்ட அளவில் பல்வேறு ஆலோசனை கூட்டங்களையும் தீவிரமாக நடத்தினார் அனூப் சந்திர பாண்டே.

உபி தலைமை செயலாளர்
2018-19-ம் ஆண்டு காலத்தில் மட்டும் பசுக்களை துன்புறுத்தியதற்காக 100க்கும் மேற்பட்டோர் உ.பி.யில் கைது செய்யபட்டனர். இந்த திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 613 பசு பாதுகாப்பு மையங்களான கோசாலைகள் அரசு செலவில் அமைக்கப்பட்டன. இதன் பின்னர் 2018-ல் உ.பி. மாநில தலைமை செயலாளராக பதவி உயர்வு பெற்றார் அனூப்.

பாஜக கணக்கு
உ.பியில் பெரும்பாலான மாவட்டங்களில் பணியாற்றிய அனுபவம் பெற்றவர் அனூப். இவர் 2024-ம் ஆண்டு வரை தேர்தல் ஆணையராக பதவியில் நீடிப்பார். உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வெல்வதற்கு கடுமையாக போராட வேண்டிய நிலையில் உள்ளது. இதனால்தான் காங்கிரஸின் ஜிதின் பிரசாதாவையும் கட்சியில் இணைத்தது. இந்த நிலையில் அனூப் சந்திர பாண்டேவை தேர்தல் ஆணையராக நியமித்திருப்பது சட்டசபை தேர்தலில் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என கணக்குப் போட்டுள்ளது பாஜக.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications