காங்கிரஸ் பதவியை ராஜினாமா செய்ய துடிக்கும் ராகுல்காந்தி.. பின்னணியில் மூத்த தலைவர்கள்
டெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய ராகுல் காந்தி பிடிவாதம் பிடிப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. ஆனால் காங்கிரஸ் கட்சியோ படுதோல்வியை சந்தித்தது. மோடிக்கு எதிராக எத்தனையோ பிரச்சாரங்களை முன் வைத்த நிலையிலும் தாம் இப்படி தோல்வி அடைந்து விட்டோம் என்ற அதிர்ச்சியில் இருந்து காங்கிரஸ் கட்சி இன்னமும் மீளவே இல்லை.
இந்த நிலையில் மேலும் அதிர்ச்சிக்குரிய வகையில் ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்ய முன்வந்தார். இதையடுத்து காங்கிரஸ் காரிய கமிட்டியில் மூத்த தலைவர்கள் சமாதானம் செய்தனர்.

பிடிவாதம்
அதையும் மீறி ராகுல்காந்தி பதவியை ராஜினாமா செய்யத்தான் போகிறேன் என பிடிவாதமாக இருக்கிறார். அவரை பிரியங்கா காந்தி, அகமது பட்டேல் உள்ளிட்டோர் சமாதானம் செய்து வருகின்றனர். எனினும் அவரது பிடிவாதத்திலிருந்து பின்வாங்கவில்லை.

வாரிசு
இந்த பிடிவாதத்திற்கு என்னதான் காரணம் என பார்த்தோமேயானால் அதில் சில உண்மைகள் புலப்படுகின்றன. பதவி விலக துடிக்கும் ராகுல்காந்தி ஒரே கோரிக்கை வாரிசுகளை தாண்டி காங்கிரஸுக்கு தலைமை அமைய வேண்டும் என்பதுதான்.

சீட்
இது எதனுடைய பாதிப்பு என்று பாதிப்பு என ஆராய்ந்தால் காரிய கமிட்டியில் பேசிய ராகுல், மூத்த தலைவர்களை கடுமையாக கடிந்து கொண்டார். அவர் பேசுகையில் ப.சிதம்பரம் உள்ளிட்டோர் தனது மகன்களுக்கு சீட் கேட்டு தொல்லை கொடுத்தனர். வேறு வழியில்லாமல் அவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டியதாயிற்று என கூறினார்.

வாரிசுகளின் ஆதிக்கம்
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்களாக இருந்தவர்களின் வரலாற்றை பார்த்தால் அதில் நேரு, அவரது மகள் இந்திரா, அவரது மகன் ராஜீவ் காந்தி, அவரது மனைவி சோனியா, அவரது மகன் ராகுல் என வாரிசு அரசியலே மேலோங்கி இருக்கிறது.

ராகுலின் நம்பிக்கை
இது போன்ற வாரிசு அரசியலுக்கு நாமே முன்னுதாரணமாக இருந்து வருவதால்தான் மூத்த தலைவர்கள் நம்மிடம் தைரியமாக உருட்டி, மிரட்டி தங்களது மகன்களுக்கு சீட் கேட்டு வாங்குகின்றனர். வாரிசு அரசியலில் இருந்து முதலில் நாம் விடுபட்டால் கட்சியிலும் இனி வாரிசுகளுக்கான தொல்லைகள் குறையும் என்பது ராகுலின் நம்பிக்கை. இதற்காகவே அவர் தலைமை பதவியிலிருந்து விடுபட பிடிவாதமாக இருக்கிறார் போல.
-
திமுக - காங்கிரஸ்.. யார் அதிக இடங்களில் போட்டி? புதுச்சேரியில் தொடங்கியது பேச்சுவார்த்தை! -
1971 இல் மிருக பலம் பெற்ற திமுக! சுருண்டு விழுந்த காமராஜர்? இந்திராவுக்கு தண்ணி காட்டிய கருணாநிதி! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி!












Click it and Unblock the Notifications