"குற்றவாளிகளுக்கு உடந்தை.." பில்கிஸ் பானு வழக்கில் குஜராத் அரசுக்கு அதிகாரமே இல்லை.. உச்ச நீதிமன்றம்
டெல்லி: பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்த நிலையில், அப்போது உச்ச நீதிமன்றம் கூறிய சில கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு மிகப் பெரியளவில் வன்முறை கலவரம் ஏற்பட்டது. சில வாரங்கள் தொடர்ந்த இந்த கலவரத்தில் பல நூறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அந்தக் காலகட்டத்தில் பல மோசமான சம்பவங்களும் நடைபெற்றது.

அதில் பில்கிஸ் பானுவுக்கு நேர்ந்த கொடூரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானு கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குடும்பத்தில் இருந்த 3 வயதுக் குழந்தை உட்பட 14 பேர் மிகவும் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர்.
பில்கிஸ் பானு வழக்கு: இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இதில் மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் வழக்கு விசாரணை நடக்கும் போது சில காரணங்களால் விசாரணை குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கும் மாற்றப்பட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
நாட்டையே உலுக்கிய இந்த கொடூர குற்றத்தைச் செய்தவர்களைக் குஜராத் அரசு கடந்த 2022 ஆகஸ்ட் 15ஆம் தேதி விடுவித்தது. குற்றவாளிகளை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ள நிலையில், அதைப் பயன்படுத்தி குஜராத் அரசு இந்த குற்றவாளிகளை விடுவித்தது. இருப்பினும், இதை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். அவருடன் மேலும் பலரும் பொதுநல வழக்குகளைத் தாக்கல் செய்தனர்.
செல்லாது: இந்த மனுவை நீதிபதிகள் பி வி நாகரத்னா மற்றும் உஜ்ஜல் புயான் ஆகியோர் விசாரித்த நிலையில், அவர்கள் இன்று தீர்ப்பு அளித்தனர். பாதிக்கப்பட்டவர்கள் பெண்கள், அவர்கள் மரியாதைக்குரியவர்கள் அவர்களின் மரியாதை முக்கியம் என்று தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கில் குற்றவாளிகளை முன் விடுதலை செய்த குஜராத் அரசின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
என்ன காரணம்: குறிப்பாகக் குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்யக் குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. ஏனென்றால் இந்த வழக்கு விசாரணை மகாராஷ்டிராவில் தான் நடைபெற்றது. எனவே, இந்த 11 பேரை விடுவிப்பது குறித்த முடிவை வழக்கு விசாரணை நடந்த மகாராஷ்டிர அரசே எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், நீதிபதி நாகரத்னா தனது தீர்ப்பில் சில விஷயங்கள் ரொம்பவே முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
நீதிபதி நாகரத்னா தனது தீர்ப்பில், "குஜராத் அரசு குற்றவாளிகளுக்கு உடந்தையாகச் செயல்பட்டது... இந்த பயம்தான் வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்றக் காரணமாக இருந்தது. குஜராத் அரசின் இந்த நடவடிக்கை அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதற்கும் அதிகார துஷ்பிரயோகத்துக்கும் ஒரு உதாரணம். விதிகளை மீற நீதிமன்றத்தின் உத்தரவுகளையே பயன்படுத்தி குற்றவாளிகளுக்கு நிவாரணம் அளித்துள்ளன. செல்லாத உத்தரவின் மூலம் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்" என்றார்.
பழைய உத்தரவு: மேலும், கடந்த 2022இல் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி வழங்கிய தீர்ப்பு குறித்தே உச்ச நீதிமன்றம் சில முக்கிய கருத்துகளைக் கூறியது. அப்போது நீதிபதி அஜய் ரஸ்தோகி தான், இந்த வழக்கில் குற்றவாளிகள் முன்கூட்டியே விடுதலையாக மேல்முறையீடு செய்யலாம் என்று கூறியிருந்தார். அவரது இந்த தீர்ப்பை வைத்தே குற்றவாளிகள் மேல்முறையீடு செய்திருந்தனர்.
கடந்த 2022இல் உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு என்பது மோசடியான முறையில், உண்மைகளை மறைத்துப் பெறப்பட்டதாகக் காட்டமான கருத்துகளை சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. "உண்மைகளை மறைத்து, தவறான கருத்துகளை உருவாக்கி குஜராத் அரசு குற்றவாளிகள் விடுதலையைப் பரிசீலிக்கும் உத்தரவு பெறப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விடுதலை குறித்து குஜராத் பரிசீலிக்கலாம் என உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இது ஒரு மோசடி செயல்" என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications