Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த 7 மாதம் அவகாசம் தர முடியாது: உச்சநீதிமன்றம் உறுதி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற தேர்தல், சட்டசபை தேர்தலை நடத்தும் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா என்று கேள்வி எழுப்பியுள்ள உச்சநீதிமன்றம், தேர்தலை நடத்த 7 மாதங்கள் கால அவகாசம் தர முடியாது என்று, தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாதம் அவகாசம் கோரி மாநில தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

தேர்தல் ஆணையத்தின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், நாடாளுமன்றம், சட்டமன்ற தேர்தலை நடத்தும் போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த முடியாதா? என்று கேள்வி எழுப்பினர்.

என்ன பிரச்சினை

என்ன பிரச்சினை

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாதங்கள் அவகாசம் வழங்க முடியாது. தேர்தலை நடத்த என்ன பிரச்சினை என்று கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த அவகாசம் வழங்க முடியாது என்று கூறினர்.

4 மாதங்கள்

4 மாதங்கள்

அதேநேரம், தமிழகத்தில் சில மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன என்பதால் 7 மாதகாலம் கால அவகாசம் கேட்கிறோம், தற்போது அவ்வளவு கூட தேவையில்லை, 3-4 மாதகாலம் அவகாசம் வழங்கினால் கூட போதுமானது என மாநில தேர்தல் ஆணையம் கோரிக்கை வைத்தது.

பிரமாணப் பத்திரம்

பிரமாணப் பத்திரம்

ஆனால் தேர்தலை நடத்த அவகாசம் கேட்பது பற்றி 2 நாளில் பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்த 7 மாதங்கள் அவகாசம் வழங்க முடியாது எனவும் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்

கடந்த 2016ம் ஆண்டிலேயே தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அதன் பிறகும் சுமார் மூன்று ஆண்டுகள் வரை உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கண்டித்ததைத் தொடர்ந்து கடந்த 2019இல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதிலும், புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக பகுதிகள் மற்றும் நகரப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. விடுபட்ட அந்த 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்து வரும் அக்டோபர் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களை விரைந்து நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+