உலகளவில் போட்டி நிலவுகிறது.. இளைஞர்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும்.. பிரதமர் மோடி உரை!
டெல்லி: உலக அளவில் பெரிய போட்டி நிலவுகிறது, சர்வதேச வர்த்தக சந்தைக்கு ஏற்றவாறு நாம் நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி பேசி உள்ளார். உலக இளைஞர்கள் திறன் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்
எல்லா வருடமும் ஜூலை 15-ம் தேதி உலக இளைஞர் திறன் தினம் கொண்டாடப்படுகிறது. இதில் ஒவ்வொரு வருடமும் பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பை வெளியிடுவது வழக்கம்.

கடந்த 2015ம் வருடம் இதே நாளில்தான் பிரதமர் மோடி ஸ்கில் இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் வகையில் இந்த அறிவிப்பை பிரதமர் மோடி வெளியிட்டார். தற்போது இந்த திட்டம் தொடங்கி 5 வருடம் ஆகிவிட்டது .
இந்த நிலையில் உலக இளைஞர்கள் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். ஸ்கில் இந்தியா திட்டம் குறித்தும் மற்ற பல்வேறு திட்டம் குறித்தும் இன்று பிரதமர் மோடி பேசினார்.
Recommended Video
அதில், உலக அளவில் பெரிய போட்டி நிலவுகிறது. அதில், கொரோனா காலத்தில் சந்தை நிலவரம் வேகமாக மாறி வருகிறது. திறனை வளர்த்துக் கொள்வது மட்டுமே இதற்கு தீர்வாக இருக்கும். சர்வதேச வர்த்தக சந்தைக்கு ஏற்றவாறு நாம் நம்மை தகவமைத்துக் கொள்ள வேண்டும்.
திறன் மட்டுமே நம்முடைய வலிமை: ஆபத்து காலத்தில் திறன் மட்டுமே உதவும்.கொரோனா தற்போது நமது வேலை செய்யும் முறையை மாற்றியுள்ளது. இதுதான் இனி வேலை செய்யும் முறையாக இருக்க போகிறது. புதிய சூழ்நிலைக்கு ஏற்றபடி நாம் திறன்களை பெருக்கிக் கொள்ள வேண்டும் .

திறனை வளர்த்துக் கொள்ள வளர்த்துக் கொள்ள அனுபவமும் நமக்கு வளரும். திறனுக்கு வயதிற்கும் நேரத்திற்கும் தொடர்பு இல்லை. திறன் என்பது தனித்துவம் வாய்ந்தது. நாள்பட நாள்பட திறன் அதிகரிக்கவே செய்யும். நம்முடைய திறனை யாராலும் அபகரிக்க முடியாது.
திறன் என்பது தனிப்பட்டவர்களுக்கு சொந்தமானது. திறன்தான் இளைஞர்களை இயக்கும் சக்தி கொண்டது. புதிதாக திறனை வளர்த்துக் கொண்டால், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முன்னேறலாம். மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சுத்தமாக இருக்க வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், என்று பிரதமர் மோடி தனது உரையில் குறிப்பிட்டு உள்ளார்.
-
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications