இதை செய்யுங்கள் கொரோனா வைரஸ் உங்க கிட்டயே வராது.. உலக பிரபல மருத்துவரின் டிப்ஸ்!
டெல்லி: முகத்தில் கை வைக்காமல் இருந்தாலே கொரோனா பாதிப்பிலிருந்து 40 சதவீதம் தப்பிக்கலாம் என வைரஸ் நோய்கள் ஆராய்ச்சி நிபுணர் தெரிவித்துள்ளார்.
Recommended Video
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. உயிரை குடிக்கும் வைரஸ் நோயானது 70-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
இந்த நோய் சீனா, தென்கொரியா, இத்தாலி, ஈரான், டயமன்ட் பிரின்சஸ். ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், சிங்கப்பூர், அமெரிக்கா, ஹாங்காங், குவைத், பிரிட்டன், மலேஷியா, பஹ்ரைன், ஆஸ்திரேலியா, தாய்லாந்து, ஸ்விட்சர்லாந்து, ஈராக், கனடா, ஸ்வீடன், இந்தியா, ஐக்கிய அரபு அமீரகம், நார்வே, ஆஸ்திரியா, நெதர்லாந்து, வியட்னாம், லெபனான் உள்ளிட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது.

விளம்பரங்கள்
சாதாரண காய்ச்சல் வந்தாலே கொரோனா காய்ச்சல் என்ற அச்சம் பலருக்கு இருக்கிறது. இதுவரை இந்த நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் உயிரிழப்பு என்பது உறுதியாகிவிட்டது. இந்த நோய் வராமல் தற்காத்து கொள்வது குறித்து அனைத்து சுகாதார நிலையங்களிலும் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன.

நடவடிக்கை
கைகளை 20 வினாடிகள் நன்றாக சோப்பு போட்டு கழுவுதல். இருமும் போதும் தும்மும் போதும் கைகுட்டையாலோ அல்லது துணியாலோ வாயை மூடி கொண்டு செய்தல், உடல்நலம் பாதித்தவரின் பொருட்களை தொடாமல் இருத்தல், உடல் நலம் பாதிக்கப்பட்டவரை தொடாமல் பேசுதல். கைகளை கழுவாமல் மூக்கு, வாய், கண்களில் கைகளை வைக்காமல் இருத்தல் என பல்வேறு தற்காப்பு நடவடிக்கைகள் கூறப்படுகின்றன.

தனிமை
இந்த நிலையில் வைரஸ் நோய் குறித்து ஆய்வு செய்யும் டாக்டர் டபிள்யூ லேன் லிப்கின் கூறுகையில் ஒரு நாளைக்கு மக்கள் 100 முறையாவது முகத்தை தொட்டுக் கொள்வர். அதை செய்யக் கூடாது. உங்களுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக உணர்ந்தீர்கள் என்றால் நீங்களே உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். உலகில் உள்ள வைரஸ்களில் மிகவும் பரவும் வைரஸ்களில் கொரோனா வைரஸ் ஒன்று.

வைரஸ்
பஸ், ரயில், விமானம் உள்ளிட்ட பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் கைகளில் கையுறை அணிந்து கொண்டு பயணம் செய்ய வேண்டும். முகத்தை தொடாமல் இருந்தாலே இந்த நோயிலிருந்து 40 சதவீதம் தற்காத்து கொள்ளலாம். கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் உங்கள் ரத்த பிளாஸ்மாவை பிளாஸ்மா பேங்குகளில் கொடுக்கவேண்டும். அது கொரோனா வைரஸுக்கு சிகிக்சை அளிக்க சிறந்ததாக இருக்கும். இந்த பிளாஸ்மாக்களில் கொடிய நோய்களுக்கான எதிர்ப்பு சக்தி நிறைய இருக்கும் என்றார்.
-
இனி மருந்துகளுக்கு எல்லாம் 100% வரி.. மீண்டும் ஆரம்பித்த டிரம்ப்.. இந்தியாவை எந்தளவுக்கு பாதிக்கும்? -
ஈரான் போரால்.. புதிய சிக்கல்கள்! நிலைமையை சமாளிக்க.. பிரதமர் நரேந்திர மோடி போட்ட முக்கிய உத்தரவு! -
"இந்தியா எங்கள் நண்பர்.." போருக்கு மத்தியிலும் மறக்காமல் ஈரான் சொன்ன வார்த்தை.. இதுதான் முக்கியம்! -
இந்தியா முழுக்க "போர் ஊரடங்கு?" தீயாக பரவும் தகவல்.. பொதுமக்கள் அதிர்ச்சி! மத்திய அரசு சொல்வது என்ன? -
வெளிநாட்டு நன்கொடைக்கு கட்டுப்பாடு.. கிறிஸ்துவ அமைப்புகளுக்கு சிக்கலை தரும் FCRA.. சர்ச்சை ஏன்? -
இந்தியாவில் கள்ளக்காதல் ஆப் கிளிடென்.. பெண்கள் எண்ணிக்கை 148 சதவீதம் உயர்வு.. பெங்களூர் முதலிடம் -
இனி மெட்ரோவில் மது அருந்தினால் ஜெயில் இல்லை! 717 சிறு குற்றங்களுக்கு கைது இல்லை! வரும் புதிய மாற்றம் -
உலகமே வியந்த இந்திய திருநங்கையர் உரிமைப் போராட்டம்.. சட்டத்தால் முடக்கப்படுகிறதா? ஐநா கவலை -
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம்












Click it and Unblock the Notifications