தருமபுரி மாணவி வன்புணர்வு.. மேலும் ஒரு குற்றவாளி சரண்.. நீதிமன்றத்தில் ஆஜர்!

தருமபுரியில் 12ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அவளின் மரணத்திற்கு காரணமாக இருந்த இரண்டு இளைஞர்களில் ஒருவன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    தருமபுரி மாணவி வன்புணர்வு ஒரு குற்றவாளி கைது- வீடியோ

    தருமபுரி: தருமபுரியில் 12ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து, அவளின் மரணத்திற்கு காரணமாக இருந்த இரண்டு இளைஞர்களில் ஒருவன் தற்போது சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளான். இன்னொரு குற்றவாளி ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளான்.

    தருமபுரி அருகே சிட்லிங் கிராமத்தை சேர்ந்த பிளஸ் டு மாணவி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டார். தீபாவளிக்கு ஊருக்கு வந்த சிறுமியை அதே பகுதியை சேர்ந்த ரமேஷ், சதீஷ் என்ற இளைஞர்கள் பாலியல் வன்புணர்வு செய்து உள்ளனர்.

    இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில்தான் சிகிச்சை பலனின்றி கடந்த வாரம் அந்த சிறுமி பலியானார்.

    மோசம்

    மோசம்

    இந்த சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்த ரமேஷ் மற்றும் சதீஷ் என்ற அதே கிராமத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களை போலீசார் தேடி வந்தனர். ஆனால் இவர்கள் மீது பாலியல் வன்புணர்வு வழக்கை பதியாமல், பாலியல் முயற்சி, குற்றம் செய்ய முயற்சி என்று வழக்கு பதிவு செய்து இருந்தனர். அந்த புகாரையும் கூட ஆட்சியர் அலுவலக தலையீட்டிற்கு பின்பே எடுத்தனர்.

    ஒருவன் கைது

    ஒருவன் கைது

    இந்த குற்றத்தை செய்த ரமேஷ் மற்றும் சதீஷில், சதீஷ் மட்டும் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறான். ஒருவாரமாக தலைமறைவாகி இருந்த இவன் போலீசால் கைது செய்யப்பட்டுள்ளான். இவனை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள்.

    ரமேஷ் சரண்

    ரமேஷ் சரண்

    ஆனால் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ரமேஷ் போலீசால் கைது செய்யப்படாமல் இருந்தான். ரமேஷின் தாயார் மது வியாபாரம் செய்கிறார். அவர் போலீசுக்கு நெருக்கம் என்பதால் போலீஸ் அவனை மட்டும் தப்பவிட்டு இருக்கிறது என்று புகார் எழுந்தது. இந்த நிலையில் தற்போது குற்றவாளியான ரமேஷ் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்து இருக்கிறான்.

    மாற்றினார்கள்

    மாற்றினார்கள்

    இந்த வழக்கை விசாரித்த போலீசார் சரியாக செயல்படவில்லை என்று அந்த ஊர் மக்கள் குற்றச்சாட்டு வைத்து இருந்தனர். இதுகுறித்து அம்மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தனர். இதை தொடர்ந்து தற்போது இந்த வழக்கை விசாரிக்க பெண் போலீஸ் அதிகாரி லட்சுமி நியமிக்கப்பட்டு இருக்கிறார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+