திராவிட ஆட்சி இது.. புரோகிதர் பூஜை செய்வதா? பொது நிகழ்ச்சியில் திமுக எம்.பி.செந்தில் குமார் ஆவேசம்
தர்மபுரி: பாப்பிரெட்டிப்பட்டி அருகே ஏரி புனரமைக்கும் பணியின்போது பூமி பூஜைக்கு ஏற்பாடு செய்திருந்த பொதுப்பணித்துறை அதிகாரியிடம் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் ஆவேசமாக பேசிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Recommended Video
இந்தியாவில் அண்மைக் காலமாக எந்த அரசு நிகழ்ச்சிகளோ அல்லது கட்டடத்திற்கான பூமி பூஜைகளோ தொடங்கி வைக்கப்பட்டால், இந்து முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன. அண்மையில் புதிய நாடாளுமன்ற கட்டத்தில் தேசிய சின்னத்தை பொறுத்தும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு, இந்து முறைப்படி பூஜைகள் செய்தார். இதனை பல்வேறு தரப்பினரும் விமர்சித்தனர்.

பூமி பூஜை
இந்து முறைப்படி மட்டும் செய்யப்படும் பூஜைகளால், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கு பாதுகாப்பில்லாத உணர்வு ஏற்பாடுவதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் அதிமுக ஆட்சியில் பூமி பூஜைகள் உள்ளிட்ட சம்பிரதாயங்கள் இந்து முறைப்படி செய்யப்பட்டு வந்தன. அதேபோல் ஆயுத பூஜை என்ற பெயரில் இந்து பண்டிகைகள் அனைத்து அரசு அலுவலகங்களிலும் கொண்டாடப்பட்டு வந்தது.

திமுக ஆட்சி
இந்த நிலையில் திமுக ஆட்சியிலும் பூமி பூஜை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தொடர்ந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர். இந்தநிலையில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த ஆலாபுரம் ஏரியில் ரூ.1.38 லட்சம் மதிப்பீட்டில் ஏரியை புனரமைக்கும் பணி தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை தொடங்கி வைக்க தர்மபுரி மாவட்ட திமுக நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் அழைக்கப்பட்டிருந்தார்.

கொந்தளித்த திமுக எம்பி
அப்போது பொதுப்பணித் துறை சார்பில் பூமி பூஜை செய்ய புரோகிதர் ஒருவர் வரவழைக்கப்பட்டு தேங்காய், வாழைப்பழம், கற்பூரம் உள்ளிட்ட தீபாராதனை பொருட்களை வைத்திருந்தனர். இதனைக்கண்ட தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், பொதுப் பணித்துறை அதிகாரியை அழைத்து இது திராவிட மாடல் ஆட்சி. இந்த ஆட்சியில் நடைபெறும் அரசு விழாவில் இதுபோன்ற சம்பிரதாயங்கள் செய்யக்கூடாது என்று உங்களுக்கு தெரியாதா, விதிமுறைகள் வழங்கவில்லையா என ஆவேசமாக கேட்டார்.

மன்னிப்பு கேட்ட அதிகாரி
இதனைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அதிகாரி நாடாளுமன்ற உறுப்பினரிடம் மன்னிப்பு கேட்டார். மேலும் இது அனைவருக்குமான ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி, ஒரு மதத்தினரை மட்டும் அழைத்து நிகழ்ச்சி நடத்துவது தவறு. இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் என அனைத்து தரப்பினரையும் அழைத்து நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என தெரிவித்தார். இல்லையென்றால் நடத்த தேவை இல்லை என்று அறிவுறுத்தினார். பின்பு அனைத்து சம்பிரதாய பொருட்களும் அகற்றப்பட்டு, ஏரியை சீரமைக்கு பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் தொடங்கி வைத்தார்.
-
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
2026ல் மீண்டும் திமுக! ஸ்டாலின்தான் முதல்வர்! பாலிமார்க்கெட் கணிப்பு சந்தையில் எகிறும் திமுக கிராஃப் -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
நம்பி நம்பி.. வெம்பி வெம்பி.. அல்வா போல அள்ளிட்டுப் போன அண்ணியார்! வேதனையில் திருமா எடுத்த முடிவு! -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
சங்கித் தனத்தை காட்டிய ரஜினி.. இதுக்கா முட்டுக் கொடுத்தோம்? பொளக்கும் நெட்டிசன்கள்! வெளுத்த இயக்குநர்!












Click it and Unblock the Notifications